வதந்திகளை நம்ப வேண்டாம் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கடந்த அய்ந்து நாள்களில் பேருந்துகளில் ஆறு லட்சம் பேர் பயணம் விரைவுப் போக்குவரத்து கழகம் தகவல்

Viduthalai
1 Min Read

சென்னை, ஜூன் 9- ஜூன் 4 முதல் ஜூன் 8 வரை இயக்கப்பட்ட 11,026 பேருந்துகளில் 6,06,430 பயணிகள் பயணித்துள்ளனர் என அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், திருமணம், பக்ரீத் விழா மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. சனிக்கிழமை பக்ரீத் விழா கொண்டாடப்பட்டதால், வியாழக்கிழமை இரவு முதலே ஏராளமானோர் சென்னையிலிருந்து வெளியூர்களுக்குச் செல்ல தொடங்கியிருந்தனர்.

இந்நிலையில் ஜூன் 4 முதல் ஜூன் 8 வரை இயக்கப்பட்ட 11,026 பேருந்துகளில் 6,06,430 பயணிகள் பயணித்துள்ளனர் என அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் தெரிவித்துள்ளார். நேற்று (7.6.2025) நள்ளிரவு நிலவரப்படியும் மற்றும் ஜூன் 8 அதிகாலை 02.00 மணி வரை சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,092 பேருந்துகளில், 936 சிறப்புப் பேருந்துகளும் ஆக 3,028 பேருந்துகளில் 1,66,540 பயணிகள் பயணம் செய்துள்ளனர். ஜூன் 4 முதல் ஜூன் 8 வரை இயக்கப்பட்ட 11,026 அரசுப் பேருந்துகளில் 6,06,430 பயணிகள் பயணித்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *