ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

Viduthalai
1 Min Read

   கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

24.6.2023

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

* பாட்னாவில் 16 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று (22.6.2023) நடந்தது. இதில், 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த 16 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். 

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* இந்தியாவின் கூட்டாட்சியை பாஜக துண்டாடுகிறது. தற்போதைய மோடி அரசில், அனைத்திலும் ஒன்றிய அரசை மய்யப்படுத்தும் போக்குகள் அதிகரித்துள்ளன என்கிறார் பேராசிரியர் கிறிஸ்டபி ஜாப்ரலெட்.

தி டெலிகிராப்:

* கிட்டத்தட்ட 20 எதிர்க்கட்சிகளின் அரசியல் ஒத்து ழைப்பான பாட்னா ‘மெகா-பேரணி’ ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் வளர்ச்சியாகும். 2014இல் உருவான பாரதிய ஜனதா கட்சியின் தேசிய அதிகாரத்திற்கு எதிரான ஒரு கட்டமைப்பு உருவாகி வருவதை குறிக்கிறது என்கிறார் அரசியல் ஆய்வாளர் ஆசிம் அலி.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* மக்களாட்சி, மதச்சார்பின்மை, பன்முகத்தன்மையை காப்பாற்ற வேண்டுமானால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் அனைத்துக் கட்சிகளும் மிகத் தெளிவாக இருக்கின்றன. இதில் கடைசி வரை உறுதியாக இருக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு சொன்னேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *