ஆளுநரைத் திரும்பப்பெறக் காஞ்சிபுரத்தில் கையெழுத்து இயக்கம் – திராவிடர் கழகம் பங்கேற்பு

1 Min Read

அரசியல்

காஞ்சிபுரம், ஜூன் 24– காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நினைவு இல்லம் அருகில், ஆளுநர் ஆர்.என். ரவியைத் திரும்பப் பெறக் கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கும் மாபெரும் கையெ ழுத்து இயக்கம் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமையில் 20.6.2023 அன்று காலை 9.00 மணியளவில்  தொடங்கப்பட்டது. 

மதிமுக ஏற்பாடு செய்த நிகழ் வில் திராவிடர் கழகம், காங்கிரஸ், வி.சி.க, சி.பி.அய், சி.பி.அய்.எம், த.வா.க, ம.நே.ம.க உள்ளிட்ட தோழமை கட்சியினர் கலந்துக் கொண்டனர். 

இந்நிகழ்வில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வளையாபதி முன் னிலை வகித்தார். திராவிடர் கழகம் சார்பில் கழகக் காப்பாளர் டிஏஜி. அசோகன், மாவட்ட கழகத் தலைவர் அ.வெ. முரளி, மாவட்ட செயலாளர் கி. இளையவேள், மாவட்ட இணைச் செயலாளர் ஆ. மோகன், மாநகரத் தலைவர் ச. வேலாயுதம், மாநகரச் செயலாளர் இ. இரவிந்திரன்,  மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் வீ. கோவிந்தராசு ஆகியோர் கலந்து கொண்டனர். 

அனைத்துக் கட்சி மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு ஆளுநருக்கு எதிராகக்  கையெழுத்திட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *