மருத்துவம் வளர்ந்த இந்த காலத்தில், பல உயிர்களைக் காப்பாற்றும் வகையில் பல்வேறு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றாகும் HPV தடுப்பூசி. இது பெண்கள் மட்டுமின்றி ஆண்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் Human Papillomavirus (HPV) வைரஸை தடுக்கும் ஒரு முக்கியமான சாதனையாக இருக்கிறது.
எச்.பி.வி வைரஸ் என்றால் என்ன?
எச்.பி.வி (HPV) என்பது மனித பப்பிலோமா வைரஸ் (Human Papillomavirus) எனப்படும் ஒரு பொதுவான வைரஸாகும். இது ஒரு பாலியல் தொடர்பு வாயிலாக பரவும் வைரஸ் ஆகும். உலகளவில் அதிகம் பரவும் பாலியல் தொற்றுக்களில் ஒன்று இது தான். இதில் சில வகைகள் கர்ப்பப்பை புற்றுநோய் (Cervical Cancer), தொண்டைப் புற்றுநோய் போன்ற தீவிர நோய்களுக்கு காரணமாகிறது.
எச்.பி.வி வைரஸின் சிறப்பம்சங்கள்:
இது ஒரே ஒரு வைரஸ் அல்ல — 150-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.
சில வகைகள் சாதாரண கண்ணுக்கு தெரியாத தோல் விருப்புகளை (warts) மட்டும் ஏற்படுத்தும்.
ஆனால் சில வகைகள் மிகவும் ஆபத்தானவை — குறிப்பாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (cervical cancer), கழுத்துப்பட்டை புற்றுநோய், மலத்துளை புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்தும்.
எச்.பி.வி வைரஸ் எவ்வாறு பரவுகிறது?
- பெரும்பாலும் பாலியல் தொடர்பு மூலம் (மலத்துவாரம் வழியாக இருக்கலாம்).
- தொற்றுறுதியான நபருடன் உடல் தொடர்பு ஏற்பட்டால் கூட பரவக்கூடும். பாலியல் உறவுகள் இல்லாமலும் கூட (தோல் தொடர்பு வழியாக) சில நேரங்களில், பாலியல் உறவில்லாத சூழ்நிலையிலும், பாதிக்கப்பட்ட பகுதி தோலைத் தொடுவதன் மூலம் HPV பரவக்கூடும்.
- பரிசோதனைக்கான கருவிகள் மற்றும் பிற பொருட்கள் மூலம் பாதிக்கப்பட்ட நபரின் உடல் திரவங்கள் (வாயு, தோல் மற்றும் பிறப்புற் சுரப்பிகள்) இருந்த கருவிகளை பகிர்ந்தால் பரவ வாய்ப்பு உள்ளது (அரிதாகவே காணப்படும்).
- பிறப்பின் போது: தொற்றுடன் இருக்கும் தாயிலிருந்து குழந்தைக்கு பிறப்பின் போது HPV பரவ வாய்ப்பு இருக்கிறது (ரொம்ப அரிதாகவே நடக்கும்).
எச்.பி.வி வைரஸின் பாதிப்புகள்
- கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (Cervical Cancer): இந்த வைரஸின் மிகப் பெரிய மற்றும் மிகவும் கவலைக்கிடமான பாதிப்பு பெண்களில் ஏற்படும். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஆகும். உலகளாவிய பெண்களுக்கான புற்றுநோய்களின் மிகப்பெரும் காரணிகளில் இது ஒன்றாகும். இந்த வைரஸ் கர்ப்பப்பையின் மேற்பரப்பில் உள்ள செல்களை பாதித்து, அந்தச் செல்கள் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறி புற்றுநோயாக மாறுவதற்கு வழிவகுக்கிறது.
- ஆண்களிலும் ஏற்படும் புற்றுநோய்கள்: எச்.பி.வி.வைரஸ் ஆண்களிடத்திலும் பாதிப்புகளை உண்டாக்குகிறது. இதில் தொண்டை புற்றுநோய், பெரினியல் புற்றுநோய், குடல் புற்றுநோய் போன்ற தீவிர நோய்கள் அடங்கும். இவை ஆண்களின் உடல் உறுப்புகளில் தாக்கம் செலுத்தி, மரணத்தை ஏற்படுத்தக்கூடும்.
- மற்ற பாதிப்புகள்: சில நேரங்களில் வாயின், தொண்டை, நாசி துவாரம் பகுதிகளில் புற்றுநோய்கள் உருவாகும் வாய்ப்பும் உள்ளது.
எச்.பி.வி. வைரஸ் கண்டறியும் பரிசோதனைகள் என்னென்ன?
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான ஸ்கிரீனிங் 21 வயதில் அல்லது திருமணத்திற்கு பிறகு தொடங்க வேண்டும்.
21 முதல் 29 வயதுடைய பெண்கள் சைட்டாலஜி ஸ்கிரீனிங்கை (வழக்கமான கர்ப்பப்பை வாய் சைட்டாலஜி ஸ்மியர்ஸ் அல்லது திரவ அடிப் படையிலான சைட்டாலஜியுடன்) ஒவ்வொரு 2 வருடங்களுக்கும் பெற வேண்டும்.
30 முதல் 65 வயதுடைய பெண்களுக்கு, HPV சோதனை மற்றும் சைட்டாலஜி ஆகிய இரண்டையும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஸ்கிரீனிங் செய்து கொள்ளலாம். சைட்டாலஜி மூலம் மட்டும் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஸ்கிரீனிங்கைத் தொடரலாம்.
பெண்கள் 65 வயதிற்குப் பிறகு ஸ்கிரீனிங்கை நிறுத்த வேண்டும். புற்றுநோய் அல்லாத நிலைமைகளுக்காக மொத்த கருப்பை நீக்கம் செய்யப்பட்ட பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை.
எச்.பி.வி. தடுப்பூசியைப் பெற்ற பெண்கள் கூட குறிப்பிடப்பட்ட அட்டவணையின்படி தொடர்ந்து ஸ்கிரீனிங் செய்துகொள்ள வேண்டும்
எச்.பி.வி வைரஸ் பாதிப்புகளுக்கு தீர்வு
- தடுப்பூசி மிக முக்கியமான பாதுகாப்பு வழி ஆகும்.
- பாதுகாப்பான பாலியல் பழக்கம், பாதுகாப்பான ஆணுறை (Condom) பயன்படுத்துதல்.
- பாப்ஸ்மியர் சோதனை (Pap smear) போன்ற பரிசோதனைகள் மூலம் ஆரம்ப கட்டத்தில் கண்டறியலாம்.
எச்.பி.வி தடுப்பூசி ஏன் அவசியம்?
- நம் நாட்டில் மட்டும் 7 நிமிடத்திற்கு ஒரு பெண் கருப்பை வாய் புற்றுநோயால் இறந்து போகிறார். ஒரு தாயின் மரணம் ஒரு குடும்பத்திற்கு எவ்வளவு வேதனையைக் கொடுக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. பெண்களைக் காவு கொடுக்கும் புற்றுநோய்களில் கருப்பைவாய் புற்றுநோய் தான் முதலிடம் வகிக்கிறது. கருப்பைவாய் புற்றுநோயை தடுத்துவிட்டால் மகளிருக்கு நேரிடும் புற்றுநோய் சாவுகளில் 50% தவிர்த்து விட முடியும். மேலும் இந்த எச்.பி.வி தடுப்பூசி எடுத்து கொள்வதன் மூலம் வைரஸால் ஏற்படும் புற்றுநோய் ஆபத்தை 90% வரை குறைக்க முடியும்.
- பெண்களுக்கு மட்டுமல்லாது தற்போது ஆண்களுக்கும் இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேல் தொண்டை புற்றுநோய், ஆண்குறி புற்றுநோய் மற்றும் ஆசனவாய் புற்றுநோய் ஆகியவற்றை தடுக்க வல்லது இந்த தடுப்பூசி. மேலும் ஆண்களிடம் இருந்து பெண்களுக்கு இந்த வைரஸ் பரவுவதையும் தடுக்கிறது. எனவே, ஆண்களும் இந்த தடுப்பூசியை பெறுவது அவசியம்.
- இளம்வயதில் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு திறன் மிக அதிகமாக இருக்கும். பாலியல் வாழ்க்கையை ஆரம்பிக்கும் முன் எடுத்தால் வைரஸிடம் இருந்து முழுமையான பாதுகாப்பு கிடைக்கும்.
தடுப்பூசி யாருக்கு பரிந்துரைக்கப்படுகிறது?
- சிறுவர்கள் (பொதுவாக 9 முதல் 14 வயது வரை):முக்கியமாக பரிந்துரைக்கப்படுகிறது. இந்த வயதில் தடுப்பூசி கொடுத்தால், உடல் மிகச்சிறந்த பாதுகாப்பு ஏற்படுத்தும். பாலியல் உறவு தொடங்கும் முன் தடுப்பூசி கொடுத்தால், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 9-14 வயதிற்குள் 2 டோஸ் மட்டும் போதுமானது (6 மாத இடைவெளியில்).
- இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் (15–26 வயது வரை): இவர்கள் கூட தடுப்பூசி பெறலாம், சற்று அதிக டோஸ் தேவைப்படும் (3 டோஸ்). ஏற்கெனவே சிலர் HPV வைரஸுக்கு எக்ஸ்போஸ் ஆகியிருந்தாலும், தடுப்பூசி மற்ற வகைகளுக்கு எதிரான பாதுகாப்பு தரும்.
- 27 முதல் 45 வயது வரை உள்ளவர்கள்: இந்த வயதுக்குட்பட்டவர்கள் கூட தனிப்பட்ட ஆலோசனை அடிப்படையில் தடுப்பூசி பெறலாம். ஏற்கெனவே தொற்று ஏற்பட்டிருந்தாலும், மீதமுள்ள வைரஸ் வகைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும். பொது பரிந்துரை இல்லை, ஆனால் சில சந்தர்ப்பங்களில் பயனுள்ளதாக இருக்கலாம்.
தடுப்பூசியினால் அதிகமாக
காணப்படும் பக்க விளைவுகள்:
காணப்படும் பக்க விளைவுகள்:
வலி , தோல் சிவந்திருத்தல்,வீக்கம்,அரிப்பு (அரிதாக) இவை 1–2 நாட்களில் தானாக மறைந்துவிடும்.
உடலளவில் தலைவலி, மந்தமாக இருத்தல் (throbbing/weakness), காய்ச்சல் (சிறிய அளவு), மூட்டு வலி அல்லது தசை வலி, சோர்வு, வாந்தி அல்லது வயிற்றுப் போக்கு (அரிதாக)
பாதுகாப்பு நடவடிக்கைகள்:
- இந்த தடுப்பூசியை நம் உடலில் தசை பகுதியில் ஊசி மூலம் செலுத்துகிறார்கள். ஊசி போட்டு 15 நிமிடங்கள் டாக்டர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். ஊசியை உட்கார்ந்த நிலையிலோ அல்லது படுத்திருக்கும் நிலையிலோ போட வேண்டும்.
- தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண்களும் கருப்பை வாய் புற்றுநோயை கண்டறியும் பரிசோதனையான பாப்ஸ்மியர் சோதனையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் நமது தடுப்பூசி குறிப்பிட்ட சில வீரியம் வாய்ந்த வைரஸ்களை மட்டுமே தடுக்க வல்லது என்பதை மறந்து விடலாகாது. பிற வைரஸ்களால் உருவாகக்கூடிய புற்றுநோயை பாப்ஸ்மியர் மூலம் கண்டறிந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்.
- உங்களுக்கு ஏற்கெனவே ஏதேனும் மருந்து அலர்ஜி இருந்தால், மருத்துவரிடம் முன்பே தெரிவிக்க வேண்டும்.