அமராவதி, ஜூன் 8- ஆந்திராவில் தொழிலாளர்களின் 9 மணி நேரம் வேலை நேரத்தை, 10 மணி நேரமாக உயர்த்தி அந்த மாநில அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு நிலவுகிறது.
ஆந்திரா மாநிலத்தில் தெலுங்கு தேசம், பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு திருப்பதி லட்டு கலப்படம் விவகாரத்துக்கு இணையாக மற்றொரு விவகாரம் வெடித்துக் கொண்டிருக்கிறது. அங்கு தற்போது ஒரு நாளுக்கு 9 மணி நேரம் பணி என்ற விதி அமலில் உள்ளது. இந்நிலையில் அதை 10 மணி நேரமாக உயர்த்தியுள்ளது அம்மாநில அரசு.
சட்டத்திருத்தம்
ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிந்த பிறகு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக அந்த மாநில அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாகத் தான் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு எதிர்க் கட்சிகளும், தொழிற் சங்கங்களும் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் 9 மணி நேரம் பணியில் இருந்து 10 மணி நேரமாக அதிகரித்து சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளனர். இதுகுறித்து ஆந்திரா தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பார்த்தசாரதி, “முதலீட்டாளர்கள், பணியாளர்கள் இருவரும் பயனடையும் வகையில் இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இரவுப்பணி முறையில்…
பிரிவு 54இன்படி 9 மணி நேரம் பணி, 5 மணி நேரத்திற்கு ஒரு மணி நேரம் என்று இருந்தது. பிரிவு 55இன்படி 10 மணி நேரம் பணி, 6 மணி நேரத்திற்கு ஒரு மணி நேரம் ஓய்வு என்று கொண்டு வரப்பட்டுள்ளது. ஓவர் டைம் என்பது ஒவ்வொரு காலாண்டுக்கும் 75 மணி நேரமாக இருந்தது. புதிய விதிகள்படி அது 144 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் பல நிறுவனங்கள் நம் மாநிலத்தில் முதலீடு செய்வார்கள். பெண்கள் இரவுப்பணி முறையில் (நைட் ஷிப்ட்களில்) பணியாற்றுவதை ஊக்குவிக்கும் வகையிலும் சில தளர்வுகள் கொண்டு வரப் பட்டுள்ளன. அவர்களுக்கு போக்குவரத்து, பாதுகாப்பு வசதிகள் செய்யப்படும். இதன் மூலம் சமூக பாலின பேதங்கள் கலையப்பட்டு பெண்களின் முன்னேற்றத்துக்கும் உதவும். அதிகம் உழைத்தால், அதிக வருமானம் கிடைக்கும்.
உலகமயமாக்கல்
இது சமூக பொருளாதாரத்தை உயர்த்தும் என்று நம்புகிறோம். உலகமயமாக்கல் எல்லா பகுதி களிலும் நடக்கிறது. உலகளவில் கடைப்பிடிக்கும் விதிகள் அடிப் படையில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமைச்சரவை கூடி, தொழிலாளர் சட்டத்தை நன்கு ஆராய்ந்து இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது. என்று கூறியுள்ளார்.
இதற்கு எதிராக தீவிர போராட்டம் நடத்தி வரும் தொழிற் சங்கங்கள், பரபரப்பான வாழ்க்கை முறையில் பணிச்சுமை தவிர்க்க முடியாத பிரச்சினையாக மாறி வருகிறது. கார்ப்பரேட் கலாச் சாரத்தில் பணி நீக்கம், அதிக பணி நேரம் என்று தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
தொழிலாளர் விரோத சட்டம்
இந்த சட்டத் திருத்தத்தை திரும்பப்பெற பெற வேண்டும்.” என்று கூறியுள்ளனர். சிபிஅய் கட்சி மாநிலச் செயலாளர் ராம கிருஷ்ணா, “தேசிய ஜனநாயக கூட்டணி தொழிலாளர் விரோதச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
ஒன்றிய, மாநில அரசுகள் தொடர்ந்து தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 11 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பாக தேசியளவில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.” என்று கூறினார்.