இந்த கிராமத்தில் வசித்தால்
ரூ.18 லட்சம் வழங்கப்படும்!
ரூ.18 லட்சம் வழங்கப்படும்!
சொந்த வீட்டைத் தவிர்த்து எங்கு வசித்தாலும் நீங்கள் வாடகையை செலுத்தியே ஆக வேண்டும். ஆனால், சுவிட்சர்லாந்தில் உள்ள அல்பினன் கிராமத்திற்கு சென்று வசித்தால், அந்நாட்டு அரசு உங்களுக்கு ரூ.18 லட்சம் வழங்கும். அதுபோக, மாத செலவுகளுக்கு மாதமாதம் ரூ.2.5 லட்சம் வழங்கப்படும். அந்த கிராமத்தில் உள்ள மக்கள், வேலை தேடி வெளி நகரங்களுக்குச் செல்வதால், மக்கள் வசிப்பதை உறுதி செய்ய அரசு இந்த சலுகைகளை வழங்குகிறது.
அமெரிக்காவில் ஆபாச தளங்களுக்கு தடை!
அமெரிக்காவில் அனைத்து ஆபாச தளங்களுக்கும் தடை விதிக்கப்படலாம். ஆம், அண்மையில், குடியரசுக் கட்சி செனட்டர் மைக் லீ என்பவர், அமெரிக்க சமூகத்தை நாசமாக்கும் ஆபாசப் படங்களுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளார். இளைய தலைமுறையை பாதிக்கும் அனைத்து விதமான ஆபாச படங்களுக்கு தடை விதிக்கவும், மீறினால் 30 ஆண்டு சிறை விதிக்கவும் இம்மசோதா கோருகிறது. இதன்மீது இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.
மீனவர்களுக்கு ரூ.8,000 தடைக்கால நிவாரண நிதி..
தமிழ்நாட்டில் 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் வரும் 14ஆம் தேதியுடன் முடிவடைகிறது. நடப்பாண்டில் மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக ரூ.8,000 வழங்கப்பட்டு வருகிறது. 75 சதவீதம் மீனவர்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட்டுவிட்டது.
எஞ்சிய மீனவர்களுக்கு தடைக்காலம் முடியும் தருவாயில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேரிடர் காலங்களில் கடலுக்கு செல்லாததற்காக ரூ.6,000, மீனவர் சேமிப்பு நிதி ரூ.4,500 எனவும் வழங்கப்படுகிறது.
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணிவாய்ப்பு
தமிழ்நாட்டில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 4,500 பயிற்சிப் பணியாளர் (அப்ரண்டீஸ்) பணியிடங்கள் காலியாகவுள்ளன. ஏதேனும் ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு 28. தேர்வாகும் விண்ணப்பதாரர் களுக்கு ஆரம்ப ஊதியமாக மாதம் ரூ.15,000 ஊதியமாக வழங்கப்படும் என்றும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றுத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
5 ஆண்டு எம்.ஏ. தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்!
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் ஒருங்கிணைந்த 5 ஆண்டுகால M.A தமிழ் படிப்புக்கு விண்ணப் பிக்கலாம் என உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவத்தை www.ulakaththamizh.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த படிப்பில் சேரும் மாணவர்களில் தேர்வின் அடிப்படையில் 15 பேருக்கு மாதந்தோறும் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3.45 கோடி நிதி..!
மகளிர் சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு வாழ்வாதார நிதியை தமிழ்நாடு அரசு விடுவித்துள்ளது. தி.மு.க. அரசு அமைந்த பின், இதுவரை ஊரகம், நகரப் பகுதிகளில் 1.32 லட்சம் புதிய சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மாற்றுத்திறனாளிகள், 3ஆம் பாலினத்தவர் கொண்ட சுய உதவிக் குழுக்கள் மட்டும் 345 ஆகும். இந்தக் குழுக்களுக்கு வாழ்வாதார நிதியாக ரூ.3.45 கோடியை அரசு விடுவித்துள்ளது.
தேர்தல் மோசடி
2024 மஹாராட்டிர சட்டமன்ற தேர்தலானது, இந்தியாவின் ஜனநாயக மோசடிக்கான ஒரு Blueprint என ராகுல் காந்தி சாடியுள்ளார். வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களை சேர்த்து, வாக்கு சதவீதத்தை அதிகரித்து, பாஜக வெற்றி பெற வேண்டிய இடங்களில் பொய் வாக்கு செலுத்துவதுதான் அவர்களின் Modus Operandi என விளக்கியுள்ளார். மேலும், நாளை இது எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் எச்சரித்துள்ளார்.
தாமதமான ரயில்: ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவு
மாவேலி எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக புறப் பட்டதால், மங்களூரு சென்று அங்கு கனெக்டிங் ரயிலை பிடிக்க முடியவில்லை. எனக் கூறி 5 பயணிகள் திருவனந்தபுரம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த கோர்ட், ரயில் தாமதத்தால் பாதிக்கப்பட்ட 5 பயணிகளுக்கு இழப்பீடாக தலா ரூ.10,000 வழங்க உத்தரவிட்டுள்ளது. நேரம் விலைமதிப்பற்றது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
உலக சதுரங்க வரிசையில்
3 தமிழர்கள்
3 தமிழர்கள்
சதுரங்க (செஸ்) வீரர்களுக்கான உலகத் தரவரிசையில் முதல்முறையாக 4 இந்தியர்கள் இடம்பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். இதில் 3ஆம் இடத்தில் உள்ள அர்ஜுன் எரிகாசி தவிர மற்ற 3 பேரும் தமிழர்கள் என்பது கூடுதல் சிறப்பு. குகேஷ், பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் ஆகியோர் முறையே 5, 6 மற்றும் 9ஆவது இடங்களில் உள்ளனர். சமீபத்திய நார்வே செஸ் போட்டியில் குகேஷ் 3ஆம் இடத்தைப் பிடித்திருந்தார்.