மதுரையில் நடப்பது ஆன்மிக மாநாடல்ல பா.ஜ.க.வின் அரசியல் மாநாடு! சிபிஎம் செயலாளர் பெ.சண்முகம்

Viduthalai
4 Min Read

மதுரை, ஜூன் 8- “மதுரையில் ஜூன் 22 நடக்க விருப்பது ஆன்மிக மாநாடல்ல, பாஜக வின் அரசியல் மாநாடு!” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக சமூகவலைத்தளத்தில் வெளி யிட்டுள்ள கருத்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மதுரையில் ஜூன் 22 அன்று நடக்கவிருப்பது ஆன்மிக மாநாடல்ல, பாஜகவின் அரசியல் மாநாடு!” என்றும், “மதுரையில் முருக பக்தர்கள்  மாநாடு என்ற போர்வையில் இந்து  சமய நம்பிக்கை உள்ள மக்களை  பாஜக தனது அரசியல் சுயலாபத்திற் காக பயன்படுத்திக் கொள்ளும் சதியில் ஈடுபட்டுள்ளது” என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

“இந்தச் சதித் திட்டத்தின் அடிப்படையிலேயே, பாஜகவின் அகில இந்திய தலைவர் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை இம்மாநாட்டிற்கு கூட்டம் சேர்க்கும் வேலையில் தங்களை ஈடு படுத்திக் கொண்டுள்ளனர்” என்றும் கூறியுள்ளார்.

மேலும், “வடஇந்தியாவில் ராமன் கோவில் என்ற பெயரில் கலவரத்தை உருவாக்கி ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினர். தமிழ்நாட்டில் முரு கனை முன்னிறுத்தி கலவர பூமி யாக்கி ஆட்சியைக் கைப்பற்ற கனவு காண்கின்றனர்” என்று கூறியிருக்கும் பெ. சண்முகம், “முருகனின் உண்மை யான பக்தர்கள் பாஜக-வின் சதியை புரிந்து கொண்டு இம்மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

– – – – –

‘வேடனுக்கு’ எதிரான சங்பரிவார நடவடிக்கைகள் கேரளத்தில் எடுபடாது அமைச்சர் வி.சிவன்குட்டி எச்சரிக்கை

திருவனந்தபுரம், ஜூன் 8- ராப் இசைக் கலைஞர் வேடனுக்கு  எதிரான சங் பரிவாரத்தின் நடவடிக்கைகள் மறுமலர்ச்சி கேர ளாவில் எடுபடாது என்று அம்மாநில  பொதுக் கல்வி மற்றும் வேலைவாய்ப் புத்துறை அமைச்சர் வி. சிவன்குட்டி கூறி னார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மேலும் கூறியதாவது,

“நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாடிய  ஒரு பாடலின் பெயரால் இப்போது வேட்டை நடத்தப்படுகிறது. வேடனுக்கு  எதிராக அவரது பெயர் அல்லது பாடலின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் சமூக ஊடகங்கள் மூலம் சைபர் தாக்கு தல்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. சிறீநாராயண குரு, சட்டம்பி சுவாமிகள்,  மகாத்மா அய்யன்காளி ஆகியோர் வாழ்ந்து சமூக நீதியை நிலைநாட்டிய  மண் இது. ஜாதி அடிப்படையிலான அவமானங்கள் அல்லது வேட்டை கேரள மண்ணில் ஏற்றுக்கொள்ளப்படாது. முற்போக்கான கேரளா எப்போதும்  கலைஞர்களின் சிந்தனை சுதந்திரத்திற்காக நிற்கும். வேடன் போன்ற வளர்ந்து  வரும் கலைஞர்களுக்கு பன்னாட்டு தளங்களில் வாய்ப்புகள் கிடைத்தால்,  அத்தகைய வாய்ப்புகள் மறுக்கப்படக் கூடாது” என அவர் சுட்டிக்காட்டினார்.

கேரளத்தைக் கலக்கும் வேடன் ஹிரந்தாஸ் முரளி என்கிற தனது  பெயரை, “வேடன்” என ஒரு பழங்குடி யினர் அடையாளம் கொண்டதாக அமைத்துக் கொண்டார். வேடனின்  தாய் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஈழத் தமிழர். ஈழப் போர் காரண மாக, அவர் பின்னர் தமிழ்நாட்டின் ஊட்டிக்கு குடிபெயர்ந்தவர். தந்தை முரளீதரன் கேரளத்தின் திருச்சூரைச் சேர்ந்தவர். திருச்சூரில் கூலிவேலை செய்யும் தந்தையுடன் வாழும் வேடன்  துயரம் நிறைந்த தனது வாழ்க்கை அனு பவங்களையும் சமூக ஒடுக்குமுறை களையும் பாடல் வரிகளாக்கி ராப் இசை யாக உலவ விடுகிறார்.

வேடனின் பாடல் வரிகளில் தீண்டாமை, ஜாதி ஆதிக்கம், அரசியல் விமர்சனம், ஜனநாயக ஒடுக்குமுறை போன்ற  தீவிர சமூக பிரச்சினைகளை நேர்மையாகக் கூறுகிறார். கலை நயத்துடன் வெளியான அவரது பாடல்கள், இசை ஆல்பங்கள் சமூக ஊடகங்களில் கவ னம் பெற்றன.

கடந்த சில மாத காலமாக அவரது மேடை நிகழ்ச்சிகளுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து  வருவது இதுவரை கேரளம் கண்டிராத  காட்சி. இவரது மனிதநேய உரிமைக் குரலை சங்பரிவாரங்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. அவருக்கு பாது காப்பு அரணாக கேரள அரசு விளங்கி வருகிறது.

– – – – –

நூதன மோசடி:
பா.ஜ.க. பிரமுகர் உள்பட 2 பேர் கைது

சென்னை, ஜூன் 8- போலி பணி நியமன ஆணை கொடுத்து நூதன மோசடியில் ஈடுபட்ட பாஜக எஸ்.சி,  எஸ்.டி. பிரிவு மேனாள் மாவட்டச் செயலாளர் ஜெயச்சந்திரன், உடந்தையாக இருந்த  ஜோஷிதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

குப்பைத் தொட்டிகளை போட்டோ எடுப்பதுதான் வேலை எனக்கூறி வெங்க டேஷக்கு 2023 இல் போலி நியமன ஆணை  வழங்கியுள்ளனர். மாநகராட்சியில் உதவி ஆணையர் பதவி உயர்வு வாங்கித் தருவதாக  நம்பவைத்து வெங்கடேஷிடம் ரூ.14 லட்சம்  பறித்துள்ளனர். உதவி ஆணையர் அலுவலகப் பணி ஒதுக்காததால் சந்தேகம் அடைந்த வெங்கடேஷ், மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து விசாரித்தபோது, ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வெங்கடேஷ் காவல்துறையில் புகார் தெரிவித்தார்.

புகாரின் பேரில் சென்னை மாநகராட்சியில் துப்புரவு ஆய்வாளர் பணிக்குப் போலி நியமன ஆணை வழங்கி மோசடி செய்தது விசாரணையில் அம்பலமானது.

மேலும், தலைமறைவாக உள்ள லதா மற்றும் கவுரி ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *