புதுடில்லி, ஜூன்8- நாடு முழுவதும் இதுவரை 5364 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒன் றிய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
கேரளத்தில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதால் முகக்கவசம் அணிவது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 498 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
இந்த நோய்த் தொற் றால் உலகமெங்கும் தற்போது புதிய வகை கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மீண்டும் அச்சுறுத்தி வருகிறது. சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிக அளவில் பரவி வந்த கரோனா, சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் நாடு முழு வதும் கடந்த (ஒரு நாளில்) 24 மணி நேரத்தில் 498 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால் நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை அய்யாயிரத்தை கடந்து 5,364 என்ற எண்ணிக்கையில் பதிவாகி யுள்ளது. நேற்று (7.6.2025) ஒரே நாளில் மட்டும் கரோனா பாதிப்பால் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மட்டும் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதுவரை 221 பேர் மருத்துவச் சிகிச் சையில் உள்ளனர்.