கோவை சூலூரில் ஜூன்-14இல் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்க அழைப்பிதழை தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்களிடம் கோவை மாவட்ட கழகத் தோழர்கள் வழங்கினர். உடன் தி.மு.க கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி, கழக மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகர், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ஆ.பிரபாகரன்,தி. தொ.அணி மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, தி.க.தமிழ் முரசு, ஆவின் சுப்பையா ஆகியோர் உள்ளனர்.