‘‘நானே கடவுள்” புருடாவிட்ட (ஆ)சாமியார் சிறைக்குள் கம்பி எண்ணுகிறார்!

1 Min Read

தமிழ்நாடு

செஞ்சி, ஜூன் 25 பணத்தைக் குறிவைத்து அப்பாவி மக்களை ஏமாற்றி இக்காலத்தில் பல சாமியார்கள் வலம் வருகிறார்கள். இவர்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில்  ‘நானே கடவுள்’ என நாடகமாடிய சாமியாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மக்களைக் காப்பாற்றுவதற்காக தான் இந்த பூமியில் மனித உருவில் வந்த கடவுள் என்று சொல்லியபடி, பேச முடியாதவர்களை பேச வைப்பதாகவும், நடக்க இயலாதவர்களை நடக்க வைப்பதாகவும் நாடகமாடி வந்த செஞ்சி சந்தோஷ்குமார் என்ற சாமியாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  இவர் தன்னை மகாவிஷ்ணு என்றும், தன் இரு மனைவிகளை சிறீதேவி, பூதேவி என்றும் கூறி வந்ததாகக் கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்குமுன் பழைய பட்டுத்துணிகளை வீட்டுக்கு வீடு சென்று வாங்கி, அதை ஒட்டுப்போட்டு பட்டுத் துணிகள் மொத்தமாக வாங்கும் ஏஜெண்டுகளிடம் விற்றுவந்தவர் – சில நூறுகள் வருவாய் ஈட்டிவந்தவர் தான் ‘சாமியார் அவதாரம்’ என்று கூறி, பெரிய பங்களா உள்பட அனைத்து வசதிகளுடன் குறுகிய காலத்திலேயே மக்களை ஏமாற்றி சம்பாதித்துவிட்டார் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *