திருப்பத்தூர் மாவட்ட தந்தை பெரியார் கட்டுமான தொழிலாளரணி தலைவர் வி.ஆனந்தன் 23.06.2023 அன்று மாலை 2.30 மணியளவில் இயற்கை எய்தினார். அவர்களின் இறுதி நிகழ்வு 24.06.2023 மாலை 3.00 மணியளவில் ஆதியூர் பள்ளிப்பட்டு கிராமத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. அவர் சுமார் 50 ஆண்டுகள் இயக்கப் பணிகளிலும்,போராட்டங்களிலும் ஈடுபட்டு தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை இயக்கத்திற்காக அர்ப்பணித்தவர். கழக நிகழ்வுகள் அனைத்தையும் இலவசமாக தனது ஆனந்தன் – சாந்தி திருமண மண்டபத்தில் நடத்திக் கொள்ள அனுமதித்த தந்தை பெரியார் அவர்களின் கொள்கைப் பற்றாளர். ஆசிரியர் அவர்களின் அன்பை பெற்றவர். இவருடைய இழப்பு கழகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிலப்பாகும். அய்யா அவர்களின் இறுதி நிகழ்வில் திராவிடர் கழக தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு வீரவணக்கமும், மரியாதையும் செலுத்தினர்.
வீரவணக்கம்
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books