புதுவையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம் கடலூர் விருத்தாசலம் கள்ளக்குறிச்சி விழுப்புரம் திண்டிவனம் சிதம்பரம் மாவட்டங்கள் திரள்கின்றன….!

Viduthalai
1 Min Read

புதுச்சேரியில், 8.6.2025 அன்று மாலை ஆனந்தா இன் கருத்தரங்க கூடத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

கருத்தரங்கத்தில் இயக்கத்தின் முன்னோடிகள் பல தலைப்புகளில் உரையாற்ற உள்ளனர். மாநாடு போல் விமரிசையாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் பங்கேற்க புதுச்சேரியை சுற்றி இருக்கக்கூடிய மாவட்டங்களிலிருந்து கழகத் தோழர்கள் அதிக அளவில் திறள்கின்றனர்.

புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி, கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் திண்டிவனம் கழக மாவட்ட நிர்வாகிகள் பகுதி அன்பழகன், பரந்தாமன் – விழுப்புரம் கழக மாவட்ட செயலாளர் பரணிதரன், விழுப்புரம் நகர பொறுப்பாளர்கள் சதீஷ் ராஜேந்திரன், கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் பாஸ்கர், மேனாள் மாவட்ட தலைவரும் – கழக காப்பாளருமான சுப்பராயன், விருத்தாசலம் கழக மாவட்ட தலைவர் இளந்திரையன், கடலூர் மாவட்ட கழக தலைவர் தண்டபாணி துணைத் தலைவர் மணிவேல், மாவட்ட செயலாளர் எழில் ஏந்தி, இந்திரா நகர் கழகத் தலைவர் தங்க பாஸ்கர் ஆகியோரை நேரில் சந்தித்து நிகழ்ச்சிக்கான அழைப்பையும் துண்டறிக்கைகளையும் வழங்கி தனி வாகனங்களில் தோழர்கள் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். கழக நிர்வாகிகளும் ஆர்வத்தோடு அதிக அளவில் தோழர்களை பங்கேற்கச் செய்வதாக உறுதியளித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *