நீதிபதி ஜனார்த்தனம் (ஓய்வு) மறைவிற்கு நேரில் மரியாதை

1 Min Read

மறைவுற்ற ஜஸ்டிஸ் எம்.எஸ்.ஜனார்த்தனம் உடலுக்கு இன்று (7.6.2025) காலை திராவிடர் கழகத்தின் சார்பில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ .அன்புராஜ், கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, கழக வழக்குரைஞரணித் தலைவர் வழக்குரைஞர் த. வீரசேகரன், சோழிங்க நல்லூர் மாவட்ட கழகக் காப்பாளர் ஆர்.டி. வீரபத்திரன், மருத்துவர் சா.குமார், மாநில கழக இளைஞரணித் துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ. சுரேஷ் ஆகியோர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
நீதிபதி ஜனார்த்தனம் (ஓய்வு) அவர்களின் மகன் டாக்டர் அருள்மூர்த்தி, பொறியாளர் அருள்மகேஷ், மகள்கள் டாக்டர் அருள் மலர், டாக்டர் அருமைக்கண்ணு ஆகியோரிடம் கழகத் தோழர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *