மறைவுற்ற ஜஸ்டிஸ் எம்.எஸ்.ஜனார்த்தனம் உடலுக்கு இன்று (7.6.2025) காலை திராவிடர் கழகத்தின் சார்பில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ .அன்புராஜ், கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, கழக வழக்குரைஞரணித் தலைவர் வழக்குரைஞர் த. வீரசேகரன், சோழிங்க நல்லூர் மாவட்ட கழகக் காப்பாளர் ஆர்.டி. வீரபத்திரன், மருத்துவர் சா.குமார், மாநில கழக இளைஞரணித் துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ. சுரேஷ் ஆகியோர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
நீதிபதி ஜனார்த்தனம் (ஓய்வு) அவர்களின் மகன் டாக்டர் அருள்மூர்த்தி, பொறியாளர் அருள்மகேஷ், மகள்கள் டாக்டர் அருள் மலர், டாக்டர் அருமைக்கண்ணு ஆகியோரிடம் கழகத் தோழர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர்.
நீதிபதி ஜனார்த்தனம் (ஓய்வு) மறைவிற்கு நேரில் மரியாதை

Leave a Comment