2024இல் இந்தியாவுக்கு 96.6 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து, 2.7 கோடி ரூபாய் அந்நியச் செலாவணி வருமானத்தை ஈட்டியிருக்கிறார்கள். அதே நேரம் சீனா 3.2 கோடி துருக்கி 5.26 கோடி தாய்லாந்து 3.5 கோடி இந்தோனேசியா 1.39 கோடி சிங்கப்பூருக்கு 1.65 கோடி சுற்றுலாப்பயணிகள் வந்துள்ளனர். இந்த எண்ணிகையோடு இந்தியாவை ஒப்பிடும்போது இந்தியா சுற்றுலாத்துறை மிகவும் பரிதாபமான நிலைக்குச் சென்றுள்ளது
1980களில் துவங்கி 2012 ஆம் ஆண்டுவரை உலகில் உள்ள சுற்றுலாத் தளங்களில் மக்களால் அதிகம் விரும்பப்படும் நாடுகளின் முன்னணியில் இந்தியா இருந்தது.
மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்து விலகும் போது ஆண்டுக்கு குறைந்த பட்சம் 17 முதல் 20 கோடி சுற்றுலாப்பயணிகள் இந்தியா வந்தனர். இவர்களின் வருகையினால் சுற்றுலா தொடர்பாக பல்வேறு சேவைகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு நல்ல வருவாய் கிடைத்தது. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நிலை தலைகீழாக மாறியது.
இன்கிரிடிபிள் இந்தியா
சுற்றுலாப் பயணிகளின் வருகை தலைகீழாக மாறி ஆசியாவிலேயே அதிக சுற்றுலாத் தலங்களைக் கொண்ட நாடாக இருந்த போதும் வெளிநாட்டினரின் வருகைப் பட்டியலில் ஒரு கோடியைக் கூட தாண்டி முடியாமல் போய்விட்டது. இனிவரும் காலங்களில் மேலும் குறையவாய்ப்பு உள்ளது. இன்கிரிடிபிள் இந்தியா (Incredible India) இந்திய அரசால் 2002ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு பன்னாட்டு சுற்றுலா மேம்பாட்டு வசனம் ஆகும்.
இந்தியாவில் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக, அதன் பன்முகத்தன்மை, வரலாறு, கலாச்சாரம், இயற்கை அழகு, மற்றும் சாகச வாய்ப்புகள் போன்றவற்றை உலக அளவில் வெளிப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம்.
கைவினைப் பொருட்கள் போன்றவற்றை முன்னிலைப் படுத்தி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. “இன்கிரிடிபிள் இந்தியா” என்ற முழக்கம், இந்தியாவின் தனித்துவமான மற்றும் வியக்க வைக்கும் அம்சங்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, உலக சுற்றுலா வரைபடத்தில் இந்தியாவிற்கு ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
“இன்கிரிடிபிள் இந்தியா” என்று விளம்பரம் செய்து, தாஜ்மஹால், கங்கை, காசி, காஞ்சி, காஷ்மீர் என்று எல்லாம் இருந்தும், ஏன் இப்படி பின்னடைவு?
பெண்கள் பாதுகாப்பு
இதற்கு காரணம், நம் ஆட்சியாளர்களின் மோசமான நிர்வாகத்தால் பெண்கள் பாதுகாப்பு மற்றும் மதவாதப் பிரச்சினைகளால் உலக நாட்டு மக்கள் இந்தியாவுக்கு வர பயப்படுகிறார்கள்.
இந்தியாவைப் பற்றி உலக ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்த்தால், ஒரு வெளிநாட்டுப் பயணி இந்தியாவுக்கு வருவதற்கு முன் இரண்டு முறை யோசிப்பார். பெண்கள் பாதுகாப்பு என்று ஒரு வார்த்தை இங்கே இருக்கிறதா? தலைநகரில் கூட பெண்கள் மீதான வன்முறைச் செய்திகள் அடிக்கடி வெளியாகின்றன. “இரவு 8 மணிக்கு மேல் வெளியே போகாதீர்கள், இல்லையெனில் ஆபத்து!” என்று பயண வழிகாட்டி நூல்களே எச்சரிக்கை விடுக்கின்றன.
இதையெல்லாம் படித்துவிட்டு, எந்த வெளிநாட்டுப் பெண் சுற்றுலாப் பயணி இந்தியாவுக்கு வருவதற்கு தைரியம் செய்வார்?
“பெண்கள் பாதுகாப்பு முக்கியம்” என்று பேச்சு மட்டும் பேசுகிறார்கள். ஆனால், நடைமுறையில்? பாதுகாப்பு அமைப்புகள், பொது இடங்களில் கண்காணிப்பு என்று எல்லாமே ஒரு கேலிக்கூத்து. ஹோலிப்பண்டிகை அன்று தாஜ்மகாலைச் சுற்றிப்பார்க்கச் சென்ற இணையர்களுக்கு மிகவும் கசப்பான ஒரு நிகழ்வு நடந்தது. அதில் அந்த இளஞ்ஜோடிகளைப் பிடித்து வண்ணங்களைப் பூசுகிறேன் என்ற பெயரில் ஸ்பெயினைச் சேர்ந்த இளம்பெண்ணை பாலியல் ரீதியில் சீண்டினர்.
பெருங்கூட்டத்திற்கு இடையே இது நடந்த போது யாருமே தடுக்க முன்வரவில்லை. காவல்துறையோ “ஹோலி விழா கொண்டாட்டத்தில் இதுவும் ஒரு அங்கம். கண்டுகொள்ள வேண்டாம்” என்று கூறிவிட்டது.
அந்த காணொலிகள் மிகவும் அச்சத்தை ஊட்டும் ஒன்றாக போய்விட்டதால் வெளிநாட்டுப் பயணி, “தாஜ்மஹாலைப் பார்க்கலாமா, இல்லை பயத்தோடு ஓடி ஒளியலாமா?” என்று யோசிக்க வேண்டிய நிலை. இதையெல்லாம் பார்க்கும்போது, “இன்கிரிடிபிள் இந்தியா” விளம்பரம் ஒரு நகைச்சுவையாகவே தோன்றுகிறது.
ஏக் ஹை தோ சேப் ஹை – ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருக்கலாம் என்று என்று மேடையில் மட்டுமே முழங்கும் காவிக்கூட்டம் உண்மையில் என்ன செய்கிறது?
மதவாதப் பிரச்சினை
இந்தியாவின் பன்முகத்தன்மை உலகப் புகழ் பெற்றது. ஆனால், இந்த “பன்முகத்தன்மை”யை பாஜக ஆட்சியாளர்கள் எப்படி கையாளுகிறார்கள்? மதவாதப் பிரச்சினைகள், மத அடிப்படையிலான மோதல்கள், சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் என்று செய்திகள் வெளியாகின்றன. ஒரு வெளிநாட்டவர் இந்தியாவுக்கு வருவதற்கு முன், “இங்கே மத ஒற்றுமை இருக்கிறதா, இல்லை மதக் கலவரமா?” என்று குழம்புவார்.
ஆட்சியாளர்கள் மதவாதக் கும்பல்களுக்கு மறைமுக ஆதரவு, சட்டத்தை மதிக்காத மதத் தலைவர்கள், பொது இடங்களில் வெறுப்புப் பேச்சு என்று இந்தியாவின் “ஒற்றுமை” ஒரு பெரிய நகைச்சுவையாக மாறிவிட்டது. ஒரு வெளிநாட்டுப் பயணி, “நான் கோயிலுக்குப் போனால், என்னை யாராவது குறி வைப்பார்களோ?” என்று பயப்படுகிறார். இதையெல்லாம் பார்க்கும்போது, இந்தியாவின் “பன்முகத்தன்மை” ஒரு பயமுறுத்தும் கேலிக்கூத்தாகவே இருக்கிறது.
இந்தியாவுக்கு சுற்றுலாப் பயணிகள் வராததற்கு காரணம், இயற்கை அழகு இல்லாமையோ, கலாச்சார பாரம்பரியம் இல்லாமையோ இல்லை. மாறாக, நம் ஆட்சியின் அலட்சியத்தால் பெண்கள் பாதுகாப்பு ஒரு கேள்விக்குறியாகவும், மதவாதப் பிரச்சினைகள் ஒரு பயமுறுத்தும் உணர்வாகவும் மாறிவிட்டது. “இன்கிரிடிபிள் இந்தியா” என்று விளம்பரம் செய்யும்போது, முதலில் இந்தியாவை பயணிகளுக்கு பாதுகாப்பான, அமைதியான இடமாக மாற்ற வேண்டும். இல்லையெனில், தாஜ்மஹால் இருந்தாலும், கங்கை இருந்தாலும், இந்தியா ஒரு “பயமுறுத்தும் இந்தியா”வாகவே உலக நாட்டு மக்களின் கண்களில் தெரியும்.