வெளிநாடுகளில் உயர்கல்வி கற்கும் இந்திய மாணவர்களின் கனவு – ஒரு நெருக்கடி!

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. குறிப்பாக, நேர்காணலுக்கான நேரம் ஒதுக்குவதை நிறுத்தி வைத்திருப்பது, இந்திய மாணவர்கள் உட்பட உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பெரும் கவலையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. டிரம்பின் இந்த அதிரடி நடவடிக்கைகள், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் படித்து வரும் மற்றும் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளன.

அமெரிக்காவின் கெடுபிடிகள்

அமெரிக்கக் கல்லூரிகளில் 210-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 11 லட்சத்துக்கும் அதிகமான பன்னாட்டு மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக ஓபன் டோர்ஸ் அமைப்பு கூறுகிறது. இதில், சுமார் 3 லட்சத்து 30,000 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் உயர்கல்வி பயில்கின்றனர். இது உலகிலேயே அதிக எண்ணிக்கையாகும். சீனா (2.8 லட்சம்), தென் கொரியா, கனடா, தைவான், வியட்நாம், நைஜீரியா, வங்கதேசம், பிரேசில் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஆனால், டிரம்பின் இந்த நடவடிக்கைகளால், அமெரிக்கக் கல்வி நிறுவனங்கள் பெரும் இழப்பைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வெளிநாட்டு மாணவர்களின் கல்விக் கட்டணத்தை நம்பியுள்ள பொதுப் பல்கலைக்கழகங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என பன்னாட்டு உயர்கல்வி குறித்த வியூக வகுப்பாளர் வில்லியம் பர்ஸ்டெயின் தெரிவித்துள்ளார். மேலும், சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படுவது போன்ற நடவடிக்கைகளும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மற்ற நாடுகளின் கட்டுப்பாடுகள்

அமெரிக்காவைத் தொடர்ந்து, கனடா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் வெளிநாட்டு மாணவர்களுக்கான குடிவரவு சட்டங்களில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.  கனடா: வெளிநாட்டு மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டிய நிதி ஆதாரத்தின் அளவு கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

  • பிரிட்டன்: 2024 ஜனவரி முதல், முதுநிலை மாணவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை பிரிட்டனுக்கு அழைத்து வர முடியாது.
  • ஆஸ்திரேலியா: வெளிநாட்டவர்களின் விசா விண்ணப்பங்கள் மீது வரம்பு விதித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள், வெளிநாட்டு மாணவர்களின் கனவுகளை மேலும் சிதைக்கும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

மாற்று வாய்ப்புகள்

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் இந்த கட்டுப்பாடுகள், மற்ற நாடுகளுக்கு ஒரு புதிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளன. ஹாங்காங், மலேசியா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் வெளிநாட்டு மாணவர்களை வரவேற்று வருகின்றன.

  • ஹாங்காங்: அமெரிக்கக் கொள்கைகளால் பாதிக்கப்படும் மாணவர்களை தங்கள் நாட்டில் படிக்க வரவேற்றுள்ளது.
  • மலேசியா: சன்வே பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்கள் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்துடன் கூட்டு வைத்து, பன்னாட்டு மாணவர்களுக்கு மாற்று வாய்ப்புகளை வழங்குகின்றன.
  • ஜெர்மனி: அய்ரோப்பாவில் அமெரிக்காவுக்கு ஒரு சிறந்த மாற்றாக உள்ளது. 2025-க்குள் 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் ஜெர்மனிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வெளிநாட்டு மாணவர்கள் பணிபுரியும் நேரம் வாரத்துக்கு 10 மணிநேரத்தில் இருந்து 20 மணிநேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பேராசிரியர் வில்லியம் பர்ஸ்டெயின் குறிப்பிடுவது போல, பன்னாட்டு உயர்கல்வி சந்தையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மலேசியா, ஆஸ்திரேலியா, அய்ரோப்பா மற்றும் குறிப்பாக கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள், பன்னாட்டு மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குகின்றன. பிரிட்டிஷ் மற்றும் மலேசியப் பல்கலைக்கழகங்கள் வெளிநாடுகளில் கிளை வளாகங்களை அமைத்து, மாணவர்களுக்குத் தங்கள் நாட்டிலேயே படிக்க வாய்ப்பளிக்கின்றன. இந்திய மாணவர்களின் வெளிநாட்டுக் கல்வி குறித்த திட்டம், தற்போது ஒரு பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது. கட்டுப்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், மாணவர்கள் மாற்று வழிகளை ஆராய்வதும், தங்கள் எதிர்கால திட்டங்களை மறுபரிசீலனை செய்வதும் அவசியமாகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *