சென்னை, ஜூன்.6– இணையதளங்கள் வழியாக கவர்ச்சியான விளம்பரங்களை கொடுத்து, பொதுமக்களை ஏமாற்றி லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் சைபர் குற்றவாளிகள் நூதனமான முறையில் கொள்ளை அடித்து வருகிறார்கள். இந்த குற்ற வாளிகளை மாநிலம் முழுவதும் பிடிப்பதற்காக ‘ஆபரேஷன் திரை நீக்கு’ என்ற பெயரில் ஏற்ெகனவே கடந்த டிசம்பர் மாதம் மாநில சைபர் கிரைம் காவல்துறையினர் அதிரடியாக விசாரணை நடத்தி 76 சைபர் குற்றவாளிகளை கைது செய்தனர்.
இந்த நிலையில், கடந்த ஜூன் 2-ஆம் தேதி அன்று ‘ஆபரேஷன் திரை நீக்கு-2’ என்ற தலைப்பில் இரண்டாவது முறையாக தமிழ்நாடு முழுவதும் அதிரடி கைது வேட்டை நடத்தப்பட்டது. இந்த கைது வேட்டையில் ஒரே நாளில் 136 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
159 வழக்குகளில் இவர்கள் தொடர்புடையவர்கள் ஆவார்கள். இவர்கள், 30-க்கும் மேற்பட்ட போலியான நிறுவனங்களை மோசடிக்காக நடத்தி வந்துள் ளனர். 100-க்கும் மேற்பட்ட போலி வங்கிக் கணக்குகளையும் இவர்கள் தொடங்கியதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கைது வேட்டை, இணையதள குற்றங்களை தடுப்பதற்காக நடத்தப்பட்டவை ஆகும். கைதானவர்களிடம் இருந்து, 125 அலைபேசிகளும், 35 கணினிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற கைது வேட்டை தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து நடத்தப் படும் என்று மாநில சைபர் கிரைம் காவல்துறையினர் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் சந்தீப் மிட்டல் தெரிவித்துள்ளார்.