சென்னை, ஜூன் 6 தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 6 சதவீதம் ஊதிய உயா்வு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
ஊதிய உயா்வு மூலம் குறைந்தபட்சம் ரூ.1,420 முதல் அதிகபட்சம் ரூ.6,460 வரை பணப் பலன்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் சுமாா் 1.9 லட்சம் போ் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கான 15-ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடா்பான முதல்கட்டப் பேச்சு வார்த்தை கடந்த ஆண்டு ஆக. 27-ஆம் தேதியும், இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை பிப். 13, 14 தேதிகளிலும் நடைபெற்றது. அதில், அரசுக்கும், போக்குவரத்து ஊழியா்களுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை.
மூன்றாம் கட்டப் பேச்சுவாா்த்தை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தலைமையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகா் போக்குவரத்து கழக பயிற்சி மய்யத்தில் நேற்று (5.6.2025) நடைபெற்றது. இதில் தொழிலாளா் முன்னேற்றச் சங்கப் பேரவை, அண்ணா தொழிற்சங்கப் பேரவை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியா் சம்மேளனம் (சிஅய்டியூ) உள்பட மொத்தம் 85 சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.
காலை 11 மணிக்கு தொடங்கிய பேச்சுவாா்த்தை இரவு 9 மணி வரை நீடித்தது. பல்வேறு விஷயங்கள் குறித்து தொடா் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, போக்குவரத்து ஊழியா்கள் மற்றும் அரசுக்கு இடையே உடன்பாடு எட்டப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு அரசு அனைத்துப் போக்குவரத்துக் கழகப் பணியாளா்களுக்கான 15-ஆவது ஊதிய ஒப்பந்தம் அமைச்சா் தலைமையில் இறுதி செய்யப்பட்டது.
6 சதவீத ஊதிய உயர்வு
இந்தப் புதிய ஒப்பந்தத்தின் மூலம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் 1 லட்சத்து 9,787 போ் பலனடைவா். இதில் 48,006 ஓட்டுநா்களும், 42,825 நடத்துநா்களும், 13,003 தொழில்நுட்பப் பணியாளா்களும், 2,529 இதர பிரிவு பணியாளா்களும் அடங்குவா்.
இந்த ஒப்பந்தத்தின்படி, கடந்த 2023 செப்.1-ஆம் தேதிமுதல் அனைத்து ஊழியா்களுக்கும், அடிப்படை ஊதியத்தில் 6 சதவீதம் ஊதிய உயா்வு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2024 செப்.1 முதல் நிகழாண்டு மே மாதம் வரை உள்ள ஊதிய உயா்வு நிலுவைத் தொகை மட்டும் நான்கு காலாண்டு தவணையாக வழங்கப்படும்.
இந்த ஊதிய உயா்வால் குறைந்தபட்சம் ரூ.1,420 முதல் அதிகபட்சம் ரூ.6,460 வரை பணப் பலன்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சலவைப்படி ரூ.140-லிருந்து ரூ.160 ஆகவும், தனி பேட்டா ரூ.16-லிருந்து ரூ.21 ஆகவும், இரவுப் பணிப்படி ரூ.35-லிருந்து ரூ.40 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவல்
இந்தியா முழுவதும் 4,866 பேர் மருத்துவமனையில் சிகிச்சை
புதுடில்லி, ஜூன் 6 நாடு முழுவதும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 4,866 ஆக உயர்ந்துள்ளது.
நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியாவில் தற்போது மீண்டும் கரோனா வைரஸ் பரவி வருகிறது. இதற்கு உருமாற்றம் பெற்ற எல்எப்.7, எக்ஸ்எப்ஜி, ஜேஎன்.1 ஆகிய புதிய வைரஸ்களும் சமீபத்தில் அடையாளம் காணப்பட்ட என்பி.1.8.1 என்ற துணை திரிபும் காரணமாக உள்ளது.
கரோனா தொற்று
இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சக புள்ளிவிவரப்படி நேற்று (5.6.2025) காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 564 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 4,866 ஆக உயர்ந்துள்ளது. மகாராட்டிராவில் 3 பேர், டில்லி, கருநாடகாவில் தலா இருவர் என மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 6 பேர் முதியவர்கள் மற்றும் இணை நோய் கொண்டவர்கள் ஆவர்.
சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையில் 1,487 பேருடன் கேரளா முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து மகாராட்டிரா 526, குஜராத் 508, டில்லி 562, மேற்கு வங்கம் 538, கருநாடகா 436, தமிழ்நாடு 213 என்ற எண்ணிக்கையில் சிகிச்சையில் உள்ளனர்.
மேற்கு வங்கத்தில் புதிதாக 106 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 538 ஆகவும் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 61 ஆகவும் உள்ளது. 24 மணி நேரத்தில் கரோனா நோயாளி எவரும் உயிரிழக்காத நிலையில் மொத்த உயிரிழப்பு 1 ஆக நீடிக்கிறது. இதுபோல் ம.பி.யின் இந்தூரில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.