முதலமைச்சர் முன்னிலையில், தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் – மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்

1 Min Read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (6.6.2025) தலைமைச் செயலகத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், தேர்தல் நடத்தும் அலுவலரும், சட்டப்பேரவை கூடுதல் செயலாளருமான
பி. சுப்பிரமணியத்திடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். உடன், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் சுமிட்டி தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, சாந்தோம் பேராலய அதிபரும், தமிழ்நாடு’ சிறுபான்மையினர் நல ஆணையத்தின் மேனாள் தலைவருமான வின்சென்ட் சின்னதுரை ஆகியோர் உள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த எஸ்.ஆர்.சிவலிங்கம், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமலஹாசன், ரொக்கையா மாலிக் (எ) கவிஞர் சல்மா ஆகியோரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *