மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வராமல் தடுக்க சிறந்த வழி சரியான தூங்கும் பழக்கத்தை கடைப்பிடிப்பது தான் என்கின்றனர் அமெரிக்க ஆய்வாளர்கள்.
காலையில் ஒழுங்காக எழுந்திருப்பது, தினசரி இரவில் 7-8 மணிநேரம் தூக்கம், பகல் தூக்கத்தை குறைப்பது அல்லது தவிர்ப்பது. தூக்கமின்மை குறைபாடுகள் இல்லாமல் இருப்பது போன்றவற்றை ஒழுங்காக கடைப்பிடித்தால் இதய நோய்கள் வரும் வாய்ப்பை 42% குறைக்கலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை!
ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்பாராத பரிசாக பொங்கல் பரிசுத் தொகையை தமிழ்நாடு அரசு அறிவித்து ஆணை வெளியிட்டுள்ளது. அதில் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை ரூ.500இல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு திருநாள் கால முன்பணமும் ரூ.4,000இல் இருந்து ரூ.6,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.