ஆவடி, ஜூன் 5- 31-05-2025 சனிக்கிழமை மாலை 04.00 மணி அளவில் ஆவடி மாவட்ட இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம் ஆவடி பெரியார் மாளிகையில் மாவட்ட இளைஞர் அணி தலைவர் வி.சோபன்பாபு தலைமையில் நடைபெற்றது.
அன்பு மணி கடவுள் மறுப்பு கூறி கூட்டத்தை தொடங்கினார் .இதில் 11-05-2025 அன்று நடந்த மாநில இளைஞர் அணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்துதல் குறித்து மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சோ.சுரேஷ் கருத்து உரை வழங்கினார் .
தீர்மானங்கள்:
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
குடிஅரசு நூற்றாண்டு வாகன பிரசாரம் செய்தல், குடிஅரசு நூற்றாண்டு புகைப்படம் கண்காட்சி நடத்துதல், தமிழில் பெயர்கள் வைக்கப்பட வேண்டும் என்று பிரச்சாரம் செய்தல், மாவட்ட நூலகம் செயல்பட வேண்டும் மற்றும் புத்தகங்கள் விற்பனை செய்தல், உண்மை வாசகர் வட்டம் நடத்துதல், மாதந்தோறும் தெருமுனை பிரச்சாரம் செய்தல், மாதந்தோறும் இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம் நடத்துதல்.
கூட்டத்தில் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் ச.சென்னகிருஷ்ணன் திருநின்றவூர் நகர இளைஞர் அணி செயலாளர் மா.சிலம்பரசன் மாநில மாணவர் அணி செயலாளர் செ.பெ.தொண்டறம் தி.மணிமாறன் ஆவடி நகர தலைவர் கோ.முருகன் மாவட்ட துணை தலைவர் மு.ரகுபதி பெரியார் பெரும் தொண்டர் அம்பத்தூர் அ.வெ.நடராசன்
மதுரவாயல் சரவணன், துரை. முத்துக்கிருட்டிணன், சி.அன்புமணி, மாவட்ட மகளிர் அணி தலைவர் சி.ஜெயநதி , மாவட்ட மகளிர் அணி பாசறை செயலாளர் செ.அன்புச்செல்வி, அயப்பாக்கம் அரிகிருஷ்ணன் S.புருஷோத்தமன், கவின் P.S, புரு.சுந்தராம்பாள் கலந்து கொண்டனர்.
இறுதியாக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சு வெங்கடேசன் நன்றியுரை கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்