அந்தியூரில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவிற்கு வருகை தரும் ஆசிரியர் அவர்களை வரவேற்பது என கோபி மாவட்ட கலந்துரை யாடல் கூட்டத்தில் முடிவு. 01.06.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் உள்ள பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் எதிர்வரும் ஜூன் 15, 16 அந்தியூரில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா கலந்துரையாடல் நடைபெற்றது.
– – – – –
சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதைப் பாராட்டி 31-5-2025 அன்று சேலம் மாவட்ட கழக தோழர்கள் அ.இ. தமிழர் தலைவர், அ.ச.இளவழகன், வீர. மணிமாறன், இமயவரம்பன், இராஜி, வழக்குரைஞர் செல்வகுமார், சேலம் மாநகர செயலாளர் இராவண பூபதி, மேட்டூர் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சிறீதரன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.