நாகர்கோவில், ஜூன் 5- குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கலைஞர் பிறந்த தின விழா பெரியார் மய்யம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் மாவட்ட பக தலைவர் உ. சிவதானு தலைமையில், பெரியார் பெருந்தொண்டர் ஞா.பிரான்சிஸ், ப.க. மாவட்ட செயலாளர், பெரியார் தாஸ் முன்னிலையில் நடைபெற்றது. கலைஞரின் கலை இலக்கிய பணி, மக்கள் பணி பற்றி உ.சிவதானு சிறப்புரையாற்றினார். கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தொடக்கவுரையாற்றினார். பா.சு. முத்து வைரவன், கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை ஆகியோர் கருத்துரையாற்றினர். மாநகர கழக தலைவர் ச.ச கருணாநிதி ம.செல்வராசு தங்கவேல் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர் மாவட்ட கழக இளைஞரணி தலைவர் ராஜேஸ் இளைஞரணி செயலாளர் நன்றி நவின்றார்.