கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

25.6.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

👉தெலங்கானா மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் பிற்படுத்தப்பட் டோருக்கு உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும் என மேனாள் எம்.பி. வி.அனுமந்தராவ் உள்ளிட்ட தலைவர்கள் வேண்டுகோள்.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

👉விடுமுறையில்லாமல் மனைவிக்கு 24 மணி நேரமும் வேலை – கணவனின் சொத்தில் மனைவிக்கும் சமபங்கு பெற உரிமை உள்ளது: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉அரசின் ரிசர்வ் வங்கியே பணவீக்கத்தால் பொதுமக்களின் செலவு குறைவாக இருப்பதாகவும், இதனால் விற்பனை குறைந்துள்ளதாகவும், தனியார் முத லீடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறது. இந்த தீய சுழற்சி நமது பொருளாதாரத்திற்கு ஆபத்தானது. இதற்கு பிரதமர் மோடி என்ன பதில் சொல்லப் போகிறார்? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி.

டைம்ஸ் ஆப் இந்தியா:

👉அடுத்த மாதம் சிம்லாவில் நடைபெறவிருக்கும் பாட்னா மாநாட்டின் தொடர்ச்சி, வளர்ந்து வரும் எதிர்க் கட்சிகள் கூட்டணிக்கு ஒரு ஒத்திசைவான முகத்தை வழங்குவதில் ஒரு முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.

👉உ.பி.யில் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் அதிகம். ஜாதி மறுப்பு திருமணங்கள் இந்த குற்றங்களை தடுக்க உதவும் என ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேட்டி.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *