பெரியார் மருந்தியல் கல்லூரி பங்கேற்ற உலக புகையிலை எதிர்ப்பு நாள் விழிப்புணர்வு பேரணி

viduthalai
1 Min Read

திருச்சி, ஜூன் 4– திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு நாளான 31.05.2025 அன்று மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

புகையிலை பொருட்கள்  பயன் பாட்டினை தவிர்ப்போம்

ஹர்ஷமித்ரா புற்றுநோய் மருத்து வமனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் கோவிந்தராஜ் தலைமையில் திருச்சிராப்பள்ளி நலவாழ்வு மற்றும் மருத்துவ கிராமப்புற சேவைகளின் துணை இயக்குநர் மருத்துவர் சாவித்ரி துவக்கி வைத்து சிறப்பித்த இப் பேரணியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் 112 பேர் கலந்து கொண்டு   பொதுமக்களிடையே  புகையிலை பொருட்கள்  பயன் பாட்டினை தவிர்ப்போம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் திருச்சி மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவம், செவிலியர் மற்றும் நலவாழ்வுத்துறை சார்ந்த கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இப்பேரணி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவங்கி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *