திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சாமியாரிடம் கஞ்சா பறிமுதல்

1 Min Read

திருவண்ணாமலை, ஜூன்.4– திருவண்ணாமலை மேற்கு காவல்துறையினர் கிரிவலப்பாதையில் தங்கியுள்ள சாதுக்களிடம் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாதுக்களிடம் அடையாள அட்டை உள்ளதா, தேவையற்ற நபர்கள் மற்றும் சந்தேகத்திற்கு உரிய நபர்கள் எவரேனும் தங்கியுள்ளனரா என்பது குறித்து கேட்டறிந்து விசாரணை நடத்தினர். அப்போது கிரிவலப்பாதையில் அத்தியந்தல் பகுதியில் உள்ள ஒரு ஆசிரமத்தின் அருகில் காவி உடை அணிந்து இருந்த நபரை காவல்துறையினர் சோதனை செய்ய சென்றனர். அந்தநபர் காவல்துறையினர் வருவதை கண்டதும் பையை கீழே போட்டு விட்டு தப்பியோடி விட்டார். பின்னர் காவல்துறையினர் அவரது பையை கைப்பற்றி சோதனை செய்து பார்த்த போது அதில் 250 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.’
இதையடுத்து காவல்துறையினர் அதனை பறிமுதல் செய்து தப்பியோடிய சாமியார் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணை யில் அவர் கோவையை சேர்ந்த மவுனி மாயமூலன் என்பது தெரியவந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *