Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: குருமூர்த்திகுருமூர்த்தி. என்பது கடவுள், மதம், பக்தி என்ற போர்வையில் மக்களிடம் ஊடுருவி, தங்கள் திட்டத்தை நிறைவேற்றும் ஆபத்தான அமைப்பு!
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
ஆசிரியர் அறிக்கை

குருமூர்த்திகுருமூர்த்தி. என்பது கடவுள், மதம், பக்தி என்ற போர்வையில் மக்களிடம் ஊடுருவி, தங்கள் திட்டத்தை நிறைவேற்றும் ஆபத்தான அமைப்பு!

Last updated: June 4, 2025 5:49 pm
Published June 4, 2025
ஆசிரியர் அறிக்கை
SHARE
Contents
 தமிழ்நாட்டில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கத் தந்திரம்! வெறுப்பு அரசியலை விரட்டியடித்து, ‘‘திராவிட மாடல்’’ அரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்திட ஒன்றுபட்டு நிற்போம்!ஆர்.எஸ்.எஸ். என்பது பேசுவது ஒன்று; செய்வது மற்றொன்று என்ற இரட்டை வேடதாரி!திருவிழாக்களை கலவரக் களமாக்கும் யுக்தி!ஹிந்துக் கோவில்கள் – ஆர்.எஸ்.எஸ்.சின் கிளைக் கழகங்கள்!வெறுப்பு அரசியலை விரட்டியடிப்போம்!

 தமிழ்நாட்டில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கத் தந்திரம்!
வெறுப்பு அரசியலை விரட்டியடித்து, ‘‘திராவிட மாடல்’’ அரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்திட ஒன்றுபட்டு நிற்போம்!

கடவுள், மதம், பக்தி என்ற முகமூடிகளை அணிந்து தமிழ்நாட்டில் ஊடுருவி, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ஆர்.எஸ்.எஸ். பல முகமூடிகளை அணிந்து ஊடுருவப் பார்க்கிறது. அதன் வெறுப்பு அரசியலை விரட்டியத்து, மீண்டும் ‘‘திராவிட மாடல்’’ என்ற நிலையை உருவாக்க ஒன்றுபட்டு நிற்போம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அறிக்கை வருமாறு:

ஆர்.எஸ்.எஸ். என்பது ஆரிய கலாச்சாரமான, ஜாதி, வருண தர்ம, மனுவாத, மதவாதத்தைப் பரப்புவதோடு, சமஸ்கிருத வர்க்கத்தின் பேதத்தை, தங்களது பிடிவாதமான வேத கலாச்சாரம், ஸநாதன தர்மம் என்ற பெயராலும் ஆன்மிகப் போர்வையைப் போர்த்திக் கொண்டு, பெரும்பாலானவரது மதம் என்று ஹிந்து மதவெறித்தனத்தைப் பரப்பி, ‘ஒரே மதம் (ஹிந்து மதம்), ஒரே மொழி (சமஸ்கிருதம்), ஒரே கலாச்சாரம் (ஆரிய கலாச்சாரம்)’ என்பதைப் பரப்புவதற்காகவே, நூறாண்டுக்குமுன் தோற்றுவிக்கப்பட்ட ஓர் இயக்கம்.

புனேவில் உள்ள ‘சித்பவன்’ பிரிவு பார்ப்ப னர்களே இதற்கு நிறுவன மற்றும் நியமனத் தொடர் தலைவர்களாக இன்றுவரை இருந்து வருகின்றனர்.

Also read

ஆசிரியர் அறிக்கை
‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை திரட்டும் பணியில் தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
செய்தியும், சிந்தனையும்…!

இரகசியமில்லா வெளிப்படைத்  தன்மை கொண்ட ஓர் அமைப்பு அல்ல அது!

ஆர்.எஸ்.எஸ். என்பது பேசுவது ஒன்று; செய்வது மற்றொன்று என்ற இரட்டை வேடதாரி!

வெளியில் பேசுவது ஒன்று – மாற்றாக செய்கையில் மற்றொன்று திரைமறைவில் (Open Agenda, Hidden Agenda) என தனது திட்ட நடைமுறையாகக் கொண்டு, மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கமான பிறகும்கூட, பலவித தந்திரங்களால் இரட்டை வேடத்தினால் ஆட்சியைப் பிடித்து அமர்ந்து, அதன் கொள்கைகளை, திட்டங்களை செயலுரு கொள்ளச் செய்யும் ஒன்று!

சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரான நிலைப்பாடுதான் அவர்கள் கொள்கை என்றா லும், வெளியில் ஏதோ தாங்கள்தான் அதற்காக ‘நெக்குருகும் நேர்மையாளர்களாக’ தங்களை சித்தரித்துக் கொள்வார்கள்!

வெளிப்படையாக அமைப்பின் பெயரில், ‘மதம்’ சார்ந்தது என்ற குறிப்பை மறைத்து, ‘தொண்டு’ முகமூடி அணிந்து காலூன்ற திட்ட மிடும் கைதேர்ந்த ‘நடிப்புச் சுதேசிகள்’ அவர்கள்!

ஆர்.எஸ்.எஸ். ஒரு ‘டிரோஜன் குதிரை’ (‘Trojan Horse’) என்று கூறுவதற்குப் பல சான்றும், நடைமுறைகளும் உண்டு.

திருவிழாக்களை கலவரக் களமாக்கும் யுக்தி!

முதலில் பார்ப்பனர் அமைப்பு என்று தங்களை வெளிப்படையாக அறிவிக்காததுடன், பெரும்பான்மையைக் காட்டி வளைக்க, ஹிந்து மதம் என்பதையே தங்களது பிரச்சார சரக்காக்கி, கால் பதித்து, அதன் வெறிக்கு, பாமர மக்களின் கடவுள், பக்தி, மத பக்தி, கோவில், திருவிழா மோகம் என்பவற்றைத் தங்களது வியூகங்களாக்கி பலமாகக் காலூன்றி, ஆங்காங்கு கிராமங்களில் திருவிழாக்களைப் பயன்படுத்தி, கலவரங்களை உருவாக்குதலே அவ்வமைப்பின் உள்ளார்ந்த அணுகுமுறை. (மெஜாரிட்டி பேச ஒரு மதம்).

அண்மையில், மதுரை, திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோவிலுக்கு ஏதோ ஆபத்துபோல, இஸ்லாமியச் சிறுபான்மையினருக்கு எதிராக ஆதாரமற்ற அபாண்டக் குற்றச்சாட்டுகளை வைத்து, ஒரு பெரிய கூட்டம் கூட்டி, ஆளும் ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு எதிராக வாக்காளர்களைத் திரட்ட பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். செய்த முயற்சி படுதோல்வி அடைந்தது, ‘ரெடிமேட் கூட்டங்கள்‘ என்று தயாராக வைத்திருப்பர், ஹிந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் மதக் கலவரங்களை ஏற்படுத்த முயன்று, அங்கு பெருந்தோல்வி அடைந்தன.

அங்குள்ள மக்கள், ‘‘எங்களுக்குள் ஹிந்து, முஸ்லீம், கிறித்தவர் என்ற பேதமோ, பொருமலோ, பிரிவினையோ இல்லை; சகோதரர்களாக கைகோர்த்து வாழுகிறோம்; இந்த அமைதிப் பூங்காவை அமளிக்காடாக்க ஒருபோதும் இடந்தரோம்’’ என்று அறிவித்தனர் – பாராட்டத்தக்க செய்தி!

இப்போது அதையே, திடீர் முருக பக்தர்களாகி, ஒரு முருக பக்தர்கள் மாநாடு கூட்டுகிறார்களாம்! அதற்கு அத்துணைக் கட்சி பக்த கோடிகளும் வரவேண்டுமாம்! இது ஒரு புது ‘‘வித்தை, வியூகம்!’’

என்னே, மத விஷத்தை, பக்தி போதையை மயக்க மருந்தாக்கித் தரும் வேலையில் ஈடு பட்டுள்ளனர்.

ஹிந்துக் கோவில்கள் –
ஆர்.எஸ்.எஸ்.சின்
கிளைக் கழகங்கள்!

இதன் முழு நோக்கம் என்ன, எது?

வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற விருக்கின்ற சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில், மீண்டும் தி.மு.க., அதன் ஒப்பற்ற தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்குப் பதிலாக, பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியை அமைப்பதுதான்!

இதற்காக ‘அண்ணா’ பெயர் தாங்கிய ஒரு கட்சியை அடமானப் பொருளாக்கியதோடு, மேலும் தங்களது கொள்கையைக் குத்தகை விட்டவர்கள்  வரிசையைப் பெருக்க எண்ணி, அதற்கு வழி கிட்டாது, கைபிசைந்து நிற்கின்றனர்!

ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத், ஹிந்து முன்னணி போன்றவற்றிற்கு – ஒவ்வொரு ஹிந்து கோவிலையும் தங்களது கிளைக் கழகங்கள்போல எண்ணியும், அதன் திருவிழாக்களையே தங்களது போராட்டக் களங்களாக்கி, தாங்கள் காலூன்றிட திட்டமிட்டு, பக்திப் போதையைப் பரப்பி, மயக்கத்தினை ஏற்படுத்தி,  ஜாதிக் கலவரங்களை உரு வாக்கி, தமிழ் மண்ணை தங்களது ஆரிய மயமாக்கிடலாம்; இளைஞர்களை ஆர்.எஸ்.எஸ். வசப்படுத்தலாம் என்று வியூகம் வகுக்கின்றன!

எச்சரிக்கை! எச்சரிக்கை!!

‘‘பக்தியினால் வேற்றுமையும், கலவரமும்!

புத்தியினால் மட்டுமே  ஒற்றுமையும், அமைதியும்!’’

தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களே,

மானுடத்தை நேசிக்கும் மகத்தான பெரு மக்களே!,

வெறுப்பு அரசியலை விரட்டியடிப்போம்!

வெறுப்பு அரசியலை விரட்டியடித்து – ‘அனை வரும் உறவினர்’ என்ற மானுடத் தத்துவத் தாலாட்டுத் தொட்டில்  இத்தமிழ்நாடு என்பதை உலகுக்கு அறிவிக்க,

கடவுள் பக்தியையும், ஜாதி வெறி, மதவெறி, பதவி வெறியையும் தமிழ்நாட்டு மண்ணிலிருந்து விரட்டியடிக்க ஆயத்தமாவோம்!

இடையில் சில மாதங்களே!

ஏமாந்தால், இதுவரை பெற்ற வெற்றிகளை யும், பல தலைமுறைகள் மான உரிமை வாழ்வை இழக்கவேண்டிய இழிநிலையும் ஏற்படும்!

மக்களைப் பிரித்ததுபோன்று, (முருகன் கடவுள்) கடவுள்களுக்கு காவிச் சாயம் பூசி, கையில் உள்ள ‘ஓட்டைப்’ பறிக்க வருகிறார்கள், எச்சரிக்கை! எச்சரிக்கை!!

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை
4.6.2025

 

Ad imageAd image

You Might Also Like

வழி– விழி– மொழி மூன்றும் நமக்கு முக்கியம் என்று மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் பிறந்த நாளில் சூளுரைப்போம்!

முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளில், நமது உறுதி! உறுதி!!

என் வாழ்வு முடியும் வரை ‘விடுதலை’ இலக்கு நோக்கியே உழைப்பேன்! ‘‘விடுதலை வாழ்ந்தால் எவரே வீழ்வர்?’’ ‘‘விடுதலை வீழ்ந்தால் எவரே வாழ்வர்?’’ 63 ஆண்டு ‘விடுதலை’ ஆசிரியரின் நெகிழ்ச்சி அறிக்கை!

சென்னையில் பெரியார் திடலை வாங்கிட நிதி தந்ததுபோல், சிறுகனூர் ‘பெரியார் உலக’த்திற்கும் நிதி திரட்ட தயாராவீர்!!

சிறுபிள்ளைத்தனம் – விஷமத்தனம் கண்டிக்கத்தக்கது!

TAGGED:குருமூர்த்திசித்பவன்
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?