டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள்தண்டனை: சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி.
* என்னுடைய நம்பிக்கையும் வலிமையும் நீங்கள்தான். உங்கள் நலன், செயல்பாடு, தி.மு.க.வின் முன்னேற்றம் ஆகியவற்றை அறிந்து கொள்ளத் தொகுதி வாரியாக நிர்வாகிகள் சந்திப்பை தொடங்கவிருப்பதாக தொண்டர்களுக்கு தி.மு.க. தலைவர் முததலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.
* பள்ளி மாணவர்களுக்கு புதிய பாட புத்த கங்கள், நோட்டுகள் விநியோகம்: முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நீட் முதுநிலை தேர்வை இரு கட்டங்களாக நடத்துவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீட் முதுநிலைத் தேர்வை ஒரே கட்டமாக நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் ஜூன் 15ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைப்பு.
* கடலோர கருநாடகா, மலநாடு, ஹூப்ளி-தார்வாட் மற்றும் பெலகாவி உள்ளிட்ட கர்நாடகாவின் சில பகுதிகளை “வெறுப்பின் ஆய்வகங்களாக” ஆர்எஸ்எஸ்-பாஜக மாற்றுவதாக அமைச்சர் பிரியங்க் கார்கே குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
* ‘பொதுமக்கள் ஆலோசனை இல்லாமல் தாராவி குடிசை மறுசீரமைப்பு திட்டம் அங்கீகரிக்கப்பட்டது’: திட்டத்தை நிறுத்தி வைத்து, பொது விசாரணை நடத்துமாறு முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸிடம் மும்பை காங்கிரஸ் தலைவர் வர்ஷா கெய்க்வாட் வேண்டுகோள்.
– குடந்தை கருணா