பெரியார் விடுக்கும் வினா! (1665)

viduthalai
0 Min Read

படிப்பின் இலட்சியம் மனிதன் அறிவாளியாக வேண்டும். வளர்ச்சிக்குரியவனாக, ஆராய்ச்சிக்காரனாக மாற வேண்டும். ஆனால் இங்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்கிறவர்களும் படிப்பு அறிவிற்காகவே என்று கருதிச் சொல்லிக் கொடுக்கிறார்களா? படிப்பு முறை வகுத்தவர்களும் படிப்பு அறிவிற்காகவே என்று அதன்படி வகுக்கிறார்களா? கற்கின்ற கல்வியில் நாலில் ஒரு பங்குதான் வயிற்றுப் பிழைப்பிற்கென்று இருக்க வேண்டும். மற்ற 4இல் 3 பகுதி அறிவிற்காக, ஆராய்ச்சிக்காக என்று இருக்க வேண்டும். வயிற்றுப் பிழைப்புக்காகவே என்று கல்வி முறை வகுக்கப்படலாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *