சென்னை, ஜூன் 3– 10ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பில் அதிக எண்ணிக்கையில் நல்ல மதிப்பெண்கள் பெற்று மாணவர்கள் தேர்ச்சி பெற்ற தொடர் சாதனைகளால் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது.
கோடை விடுமுறை முடிந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் நேற்று (2.6.2025) திறக்கப்பட்டன. பள்ளிக்கு உற்சாகமாக வந்த மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர். அடுத்த வகுப்பிற்கு செல்லும் பயம் கலந்த மகிழ்ச்சி, நண்பர்களை சந்தித்த மகிழ்ச்சி என மாணவர்களின் பல உணர்வுகள் வெளிப்பட்டது.
மேலும் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதனிடையே, சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு 6 ஆயிரம் மாணவர்கள் புதியதாக சேர்ந்த நிலையில், இந்தாண்டு 16,490 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
அதிகபட்சமாக LKG, UKG-யில் 7,500 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் இதற்கு காரணமாக கூறுவது, படிக்கும் மாணவர்களுக்கு சலுகைகள் தாராளமாக வழங்குவது, தனியார் பள்ளிகளுக்கு நிகராக கட்டமைப்பு, கல்வி அதே போல் தொடர்ச்சியாக மாணவர்களின் சாதனைத்தேர்ச்சி போன்ற காரணங்களால் சென்னை மாநகராட்சிபள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.