அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தீர்ப்பு அரசியல்ஆதாயம் தேட நினைத்தவர்கள் எண்ணம் தவிடு பொடியாகியுள்ளது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைத்தளப் பதிவு

Viduthalai
1 Min Read

சென்னை, ஜூன் 3 அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

பெண்கள் பாதுகாப்புபற்றி வேடம்

பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்குச் செயலால் பதில் அளித்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை!

விசாரணையின் போது, உயர்நீதிமன்றமே பாராட்டிய வகையில், சென்னை மாணவி வழக்கினை நியாயமாகவும் விரை வாகவும் அய்ந்தே மாதத்தில் நடத்தி முடித்து, குற்ற வாளிக்குக் கடும் தண்டனையைப் பெற்றுத் தந்திருக்கிறோம்.

தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் இந்த வழக்கில் காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டுள்ளதாக மகளிர் நீதிமன்றமும் முன்வந்து பாராட்டி இருக்கிறது. இளம்பெண் ஒருவருக்கு நிகழ்ந்த அநீதியில் கூட அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சின்ன புத்தி கொண்ட சிலரின் எண்ணம் இதனால் தவிடுபொடியாகியுள்ளது.

பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என அண்மையில் நாம் கொண்டு வந்த சட்டத்திருத்தத்துக்கு ஏற்ப, இவ்வழக்கில் தண்டனைக் குறைப்பு (Remission) உள்ளிட்ட எந்தச் சலுகையும் இல்லாமல் கடுங்காவல் தண்டனை விதித்துள்ள நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நன்றிகூறி வரவேற்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *