முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102-ஆவது பிறந்த நாளையொட்டி இன்று (3.6.2025) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உருவச்சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மவர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, இ. பெரியசாமி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பெரியகருப்பன், மு.பெ. சாமிநாதன், டி.ஆர்.பி. ராஜா மேனாள் அமைச்சர் க.பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆ. ராசா, தயாநிதிமாறன், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேனாள் தலைவரும், மேனாள் ஒன்றிய அமைச்சருமான கே.வி. தங்கபாலு, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் மேனாள் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வாரியத் தலைவர்கள் உடனிருந்தனர்.