விழாக்கள் இல்லாத 6 மாதங்களுக்கு நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவித் தொகை நலவாரிய தலைவர் வாகை சந்திரசேகர் தகவல்

2 Min Read

திருநெல்வேலி, ஜூன் 3 தமிழ் நாட்டில்  விழாக்கள் இல்லாத காலங்களில் நாட்டுப்புற கலைஞர் களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், அவர்களுக்கு 6 மாதம் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக, நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத் தலைவர் வாகை சந்திரசேகர் தெரிவித்தார்.

நாட்டுப்புற கலைஞர்கள்

நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தின் திருநெல்வேலி மண்டல அளவிலான உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற வாகை சந்திரசேகர் கூறியதாவது:

திருநெல்வேலி மண்டலத்திலுள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த 371 கலைஞர்களுக்கு ரூ. 13.17 லட்சம் மதிப்பில் நிதியுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டுப்புற, நாடக மற்றும் திரைப்பட கலைஞர்களுக்காக பெருமளவு நிதி ஒதுக்கி, அவர்களது தேவைகளை தமிழ்நாடு முதலமைச்சர் பூர்த்தி செய்து வருகிறார். மாவட்டம் வாரியாக கலைஞர்களை நேரடியாக சந்தித்து, அவர்களது குறைகளை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. மாவட்ட அளவிலான அரசு விழாக்களில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கி, சிறந்த ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நிவாரண உதவி

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில் காலியாக உள்ள நாதஸ்வர மற்றும் தவிலிசை கலைஞர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு, இயல் இசை நாடக மன்றம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. தமிழ்நாடு இசைப் பள்ளியில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களே பயிற்சியாளர்களாக நியமிக்கப்படுவர் என்ற அரசாணையை திருத்தி அமைக்கவும், வயது வரம்பை குறைக்கவும், நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தின் சார்பில் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விழாக்கள் நடைபெறும் 6 மாதங்களுக்கு மட்டுமே நாட்டுப்புற இசை கலைஞர்களுக்கு பணி இருக்கும். பணி இல்லாத மீதமுள்ள 6 மாதங்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

விழாக்களில் நாடகங்கள், தெருக்கூத்துக்கள் நடத்துவதற்கான, காவல்துறை கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வரும் நாட்களில்  விழாக்கள் அதிகம் நடைபெறும் என்பதால், ஒரு மாதத்துக்குள் அந்த தளர்வுகளை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், திருநெல்வேலி ஆட்சியர் ஆர்.சுகுமார், சட்ட மன்ற உறுப்பினர் அப்துல்வகாப்  மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ் ணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *