சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் வி.பி. சிங்கிற்கு முழு உருவச் சிலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

2 Min Read

சென்னை,ஜூன் 26 – சமூக நீதிக் காவலர் மேனாள் பிரதமர் வி.பி. சிங்கின் முழு உருவச்சிலை மாநிலக் கல்லூரி வளாகத்தில் நிறுவப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக நீதிக் காவலராகவும், பிற்படுத்தப்பட்ட மக்களின் கலங் கரை விளக்கமாகவும் திகழ்ந்த மேனாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு மரியாதை செய்யும் விதமாக, சென்னையில் அவரது முழு உருவ கம் பீரச் சிலை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 20.4.2023 அன்று சட்டமன்றப் பேரவை விதி-110இன் கீழ் அறிவித்திருந்தார்.

உத்திரப்பிரதேச மாநிலம் அல காபாத் மாவட்டத்தில் அந்நாளில் பெரும் ஜமீந்தாரராக இருந்த ராஜா தயா பகவதி பிரதாப் சிங் குக்கு மகனாகப் பிறந்த விஸ்வநாத் பிரதாப் சிங், செல்வ சூழ்நிலையில் வளர்ந்தாலும் அதில் மனம் ஒட்டாமல் சட்டக் கல்லூரி படிக்கும் காலத்திலேயே காந்திய இயக்கத் தில் ஈடுபட்டவர். சர்வோதய சமாஜில் இணைந்து பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்து தனது நிலங்களையே கொடையாக வழங் கியவர்.

பின்னாளில் உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சராகவும், ஒன் றிய வர்த்தக அமைச்சராகவும், வெளியுறவுத் துறை அமைச்சர், நிதி அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிய உயர் பொறுப்புகளை வகித்தவர். பின் னர் தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி 1989ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக ஆனார்.

அவர் பிரதமராக இருந்தது பதினோரு மாதங்கள் தான் என் றாலும், அதற்குள் அவர் செய்த சாதனைகள் மகத்தானவை. இந் திய அரசமைப்புச் சட்டம் உருவாக் கப்பட்டபோது தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு ஒன்றிய அரசுப் பணியிடங்களில் தனி இடஒதுக்கீடு தரப்பட்டது. ஆனால், பிற்படுத் தப்பட்ட மக்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு தரப்படவில்லை.

இதனை வழங்குவதற்காக பி.பி. மண்டல் தலைமையில் அமைக்கப் பட்ட இரண்டாவது பிற்படுத்தப் பட்டோர் ஆணையம் சமூக ரீதியா கவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்திற்கு அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பரிந்துரையை அமல்படுத் தியவர் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங். அவர் தமிழ்நாட்டை தனது இரத்த சொந்தங்கள் வாழும் மாநிலமாக நினைத்தார்; தந்தை பெரியாரை தனது உயிரினும் மேலான தலைவராக ஏற்றுக் கொண்டார்.

ஒரு மனிதனுக்கு சாவை விட மிகக் கொடுமையானது “அவமா னம்”. இந்த அவமானத்தை துடைக் கும் மருந்துதான் பெரியாரின் “சுயமரியாதை” என்று சொன்னவர் வி.பி.சிங். கலைஞரை தனது சொந்த சகோதரர் போல் மதித்த வர். தனது ஆட்சியைப் பற்றிக்கூட பொருட்படுத்தாமல், ஒரு கொள் கைக்காக, இலட்சியத்துக்காக தன் னோடு இருந்த மாபெரும் தலைவர் கலைஞர் என்று பாராட்டியவர் வி.பி.சிங்.

அத்தகைய சமூக நீதிக் காவல ருக்கு அவருடைய பிறந்தநாளான இன்று (25.6.2023), ஏற்கெனவே 20.4.2023 அன்று சட்டமன்றப் பேரவை விதி 110இன் கீழ் அறிவித்த அறிவிப்பிற்கு இணங்க, சென்னை, மாநிலக் கல்லூரி மேனாள் மாணவர் பேரவை மற் றும் பேராசிரியர் பெருமக்கள் ஆகியோரது வேண்டுகோளை ஏற்று, அரசு அதனை பரிசீலித்து “சமூக நீதிக் காவலர்” வி.பி.சிங்குக்கு சென்னை, மாநிலக் கல்லூரி வளா கத்தில் முழு உருவ கம்பீரச் சிலை அமைத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் உத்தரவிட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *