சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார். திமுக பகுதி செயலாளர் பரமசிவம் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தார். மருத்துவர் தி.ச.முகமது சயி துவக்கவுரையாற்ற, சுயமரியாதை இயக்கத்தால் விளைந்த பெண்ணுரிமைப் புரட்சி” என்ற தலைப்பில் பேராசிரியர் மு.சு.கண்மணியும், “சுயமரியாதை இயக்கம் சந்தித்த எதிர்ப்புகள்” என்ற தலைப்பில் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியாரும், “சுயமரியாதை இயக்க போர் ஆயுதங்கள்” என்ற தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரனும் உரையாற்றினர். உடன் வி.சடகோபன், வி.இ.சிவக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், ஊமை.ஜெயராமன், தகடூர் தமிழ்ச்செல்வி, வி.பன்னீர்செல்வம் மற்றும் தோழர்கள் உள்ளனர்.