பெண்கள் எப்படித் தங்கள் ஆடைகளைக் குறைத்து உடலைக் காட்டிப் பணம் சம்பாதிக்கிறார்களோ அது போன்று தான் நம் சினிமா இருக்கின்றது. மேல் நாடுகளில் சினிமா என்பது மக்களின் அறிவை வளர்க்கப் பயன்படுகின்றது. அதற்காகவே சினிமா தயாரிக்கப்படுகின்றது. இங்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் மட்டுமே சினிமாக்கள் தயாரிக்கப்படுகின்றனவே ஒழிய, மனிதன் அறிவை வளர்க்க வேண்டுமென்கின்ற எண்ணத்தில் தயாரிக்கப்படுகின்றனவா? நம் கலைஞர்களைக் குறை கூறுவதாகக் கருதக் கூடாது. ரசிகர்களும், தயாரிப் பாளர்களும் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’