‘வீரமணி’யின் ஏகபோக ஆதிக்கத்தில் ‘விடுதலை’யை ஒப்படைக்கிறேன்!’ – தந்தை பெரியார்

viduthalai
1 Min Read

வீரமணி அவர்கள் எம்.ஏ.,பி.எல்., பட்டம் பெற்றவர். நல்ல கெட்டிக்காரத் தன்மையும் புத்திக் கூர்மையும் உள்ளவர். அவர்.எம்.ஏ.,பி.எல்., பாஸ் செய்து வக்கீல் தொழிலில் இறங்கியவுடன் மாதம் ரூ.300, ரூ.400 வரும்படி வரத்தக்க அளவுக்கு தொழில் வளர்ந்ததோடு கொஞ்ச காலத்திலேயே மாதம் ரூ.500, 1000 தொழில் வளம் பெற்றுவரும் நிலையைக் கண்டவர். இந்த நிலையில் அவர் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் இருந்து வந்தவர். இந்த நிலையில் சுயநலமில்லாது எவ்விதப் பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத் தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால், இதுபோல் மற்றொருவர், வந்தார் வருகிறார் வரக்கூடும் என்று உவமை சொல்லக்கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்கபடி பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் அது நம்முடைய அறியாமையாகவே முடியும் என்ற எண்ணத்தின் மீதே அவரை நம் இயக்கத் தலைமைப் பிரச்சாரகராகவும், நமது “விடுதலை” ஆசிரியராகவும் பயன்படுத்திக் கொள்ள முன்வந்து, அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் “விடுதலை”யை ஒப்படைத்து விட்டேன்.

“விடுதலை” பத்திரிகையை நிறுத்திவிடாததற்கு இதுதான் காரணம்!

இனி “விடுதலை”க்கு உண்மையான பிரசுரகர்த்தா வாகவும் ஆசிரியராகவும், வீரமணி அவர்கள் தான் இருந்து வருவார்.

‘விடுதலை’ 6.6.1964

‘விடுதலை’ நாளேடாக தொடர்கிறது என்றால் அதற்கும் காரணம் 63 ஆண்டுகளாக ஆசிரியராகத் தொடரும் நமது ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களே!

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *