‘ஏடுகொண்டல வாடா!’ ஏழுமலையான் சக்தி இதுதானா?

1 Min Read

அரசியல்

திருப்பதி, ஜூன் 26 திருப்பதியில் பெற்றோரோடு நடந்து சென்று கொண்டிருந்த 3 வயது சிறுவனை காட்டிலிருந்து வெளியேவந்த சிறுத்தை ஒன்று தூக்கிக் கொண்டு ஓடியது, பெற்றோரும் உடன் சென்ற வர்களும் கூச்சலிட்டதால் சிறுத்தை அந்தச் சிறுவனை சிறிது தூரம் இழுத்துச் சென்று கீழே போட்டு விட்டு ஓடிவிட்டது. சிறுவனை சிறுத்தை கழுத்தில் கவ்வி இழுத்த தால் முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட் டுள்ளது. சிறுவனை உடனடியாக அடிவாரத்திற்குக் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கழுத்து மற்றும் தாடை பகுதியில் சிறுத்தையின் பல் மற்றும் நகம் பட்டு சதை மற்றும் ரத்த நாளங்கள் சிதைந்துள்ளதால் சிறுவன் அபாய கட்டத்தில் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளான்.

பெற்றோர் நடந்துவந்து தலைமுடியை காணிக்கையாக கொடுப்பதாக வேண்டிக் கொண்டு திருப்பதிக்குச் சென்ற சமயம் இந்தத் துயர நிகழ்வு நடந்துள்ளது.

‘‘கடவுளை நம்பியோர் கைவிடப்படார்” என்று ஜம்பம் காட்டும் பக்தி வியாபாரிகள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *