அறிவுக்குதிர்: இளைஞர்களே, உங்களுக்குத் தெரியுமா?

1 Min Read

– மணியோசை –

1.மதச்சார்பின்மையும்-உயர்ஜாதி வைதீகப் பிடிப்பும்!

இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் (காயஸ்தா என்ற பார்ப்பனருக்கு அடுத்த உயர்ஜாதியர்) ஜனவரி 26 – குடியரசு நாள் என்று பிரதமர் நேரு – அம்பேத்கர் ஆகியோர் முடிவு செய்த நிலையில், ‘‘ஜோதிடர்களால் அசுவ நாள் என்று கருதப்படுவதால், அதை மாற்றிடவேண்டும்” என்று பிரதமரிடம் கடிதம்மூலம் வற்புறுத்தினார்.

அத்துடன் 1947 ஆகஸ்ட் 14 கூட சுபயோக சுபதினம் அல்ல; inauspicious day என்று ஜோதிடர்கள் சொன்னார்கள்; (அதையும் பொருட்படுத்தி 14-க்குப் பதில் 15 மாற்றப்பட்டது) சிலரைத் திருப்திப்படுத்த நள்ளிரவு 12 மணி – 15 ஆம் தேதி ஆகிவிடும்  அந்த நிலையில், ஜனவரி 26 பற்றியும் இப்படி எழுதினார்கள்.

பிரதமர் நேரு, ‘‘ஜோதிடத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. இதுமாதிரி தேசிய நாள் குறிக்கும்போது ஜோதிடர் கருத்தைக் கேட்பது ஏற்கத்தக்கது அல்ல. எனவே, மாற்றவேண்டிய அவசியம் இல்லை” என்று உறுதியாக மறுத்துவிட்டார்!  ‘‘ஜோதிடர்களின் தலையீட்டை நான் ஏற்க முடியாது” என்று மறுத்துக் கடிதம் எழுதிவிட்டார்.

ஜவகர்லால் நேருவை பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். வெறுப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம்; அவர் ஒரு விஞ்ஞான மனப்பான்மை கொண்ட முற்போக்குச் சிந்தனையாளர் என்பதால்தான்!

(தொடரும்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *