கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 28.5.2025

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

*ஓய்வுபெற்ற அய்ஏஎஸ் அதிகாரி அலாவுதீன் தலைமையில் தமிழ்நாடு அரசின் 7ஆவது நிதி ஆணையம் அமைப்பு.

* அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக தொழிலதிபர் எலான் மஸ்க்  அறிவிப்பு.

தி இந்து:

*அசோகா அரசியல் அறிவியல் பல்கலைக் கழகத்தின் இணைப் பேராசிரியரான அலி கான் மஹ்முதாபாத் மீதான குற்றவியல் குற்றச் சாட்டுகளை “அபத்தமானது ” என்று கூறி, 79 மேனாள் அரசு ஊழியர்களை கொண்ட அரசமைப்பு நடத்தை குழு கண்டித்துள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க அலுவலகத்தில் ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏபிவிபி, சாவர்க்கரின் உருவப்படத்தை மாட்டியுள்ளது. இது, விதிமுறைகளை மீறிய செயல் என பிற மாணவர் அமைப்புகள் கண்டனம்.

தி டெலிகிராப்:

* ஆராய்ச்சித் துறையில் இந்தியா முதலில் கவனம் செலுத்த வலியுறுத்துகிறார், தொழில் அதிபர் சுனில் மிட்டல்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ஆளுநர் இரண்டாவது முறையாக திருப்பி அனுப்பிய நிலையில், முஸ்லிம் இடஒதுக்கீடு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப கருநாடக அரசு பரிசீலித்து வருகிறது.

* தைரியம் இருந்தால் நாளை தேர்தலை நடத்துங்கள், மோடிக்கு சவால் விடுகிறார் மம்தா. “எல்லா இடங்களிலும் சிந்தூரை விற்று”, “அரசியல் ஈர்ப்புக்காக” ஆபரேஷன் சிந்தூரை பயன்படுத்துகிறார்கள் என மோடி மீது விமர்சனம்.

* உற்பத்தி வாய்ப்புகளை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டுமானால், வரிப் போர்கள் தொடங்கப்படலாம், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஏற்ற இடமாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதற்கு தமிழ்நாடு மாடல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்கிறார்கள் கட்டுரையாளர்கள் ஆஷிஷ் தவான் நிறுவனர்-தலைமை நிர்வாக அதிகாரி & தோஷி தி கன்வர்ஜென்ஸ் பவுண்டேஷனின் செயல்பாட்டு பங்குதாரர்.

*கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டில் கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மய்யத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *