திண்டிவனம், மே 30- அன்புமணியை ஒன்றிய அமைச்சராக்கி தவறு செய்துவிட்டதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் கூறியுள்ளார்.
பா.ம.க.வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி நடைபெற்றது.
கருத்து வேறுபாடு
இந்த கூட்டத்தில், தனது மகள் வழிப்பேரன் முகுந்தன் பரசுராமனை, பா.ம.க. இளைஞர் சங்கத் தலைவராக நியமித்து, பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு, பொதுக்குழு மேடையிலேயே, அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ராமதாஸ் – அன்புமணி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்த சூழலில், கடந்த மாதம் 10ஆம் தேதி அன்புமணி ராமதாசின் தலைவர் பதவியை பறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக தொடர்வார் என்றும் அறிவித்தார். அதேநேரம், கட்சியின் சட்டவிதிகள்படி நானே தலைவராக தொடர்வேன் என அன்புமணி ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்தார்.
பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க
டாக்டர் அன்புமணி கொடுத்த நெருக்கடி
டாக்டர் அன்புமணி கொடுத்த நெருக்கடி
டாக்டர் ராமதாஸ் பேட்டி
சமீபத்தில், தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் கடந்த 24ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், ‘கட்சி பதவியில் இருந்து நான் ஏன் மாற்றப்பட்டேன். அப்படி நான் என்ன தவறு செய்தேன்’ என மன வேதனையுடன் பேசினார். இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் நேற்று (29.5.2025) செய்தியாளர்களைச் சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தர்மபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் அன்புமணி பேசியதை நீங்களும் பார்த்திருப்பீர்கள். நானும் பார்த்தேன். நான் என்ன குற்றம் செய்தேன். ஏன் எனக்கு இந்த பதவி மாற்றம். ஒருமாதமாக மன உளைச்சலில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இது முழுக்க முழுக்க திசை திருப்பும் முயற்சியாகும்.தான் செய்த தவறுகளை மறைத்து மக்களிடமும், கட்சிக்காரர்களிடமும் அனுதாபம் பெற முயற்சித்திருக்கிறார். அதற்கான பதிலை சொல்வது எனது கடமையாகும்.
தவறு செய்தது அன்புமணி அல்ல. நான் தான். எனது சத்தியத்தை மீறி அன்புமணியை 32 வயதில் ஒன்றிய அமைச்சராக்கி குற்றம் செய்துவிட்டேன். பொதுக்குழுவில் என்ன நடந்தது என எல்லோருக்கும் தெரியும்.
மேடை நாகரிகமும், சபை நாகரிகமும் இல்லாமல் அநாகரிகமாக செயல்பட்டது யார்?. முகுந்தனை வீட்டில் தனக்கு உதவியாகவும், கட்சியில் அன்புமணிக்கு உதவியாகவும் நியமித்தேன்.
உடனே மேடையில் மைக்கை என் தலையில் போடாத குறையாக மேஜை மீது வீசியது சரியான செயலா?. பனையூரில் கட்சி அலுவலகம் திறந்திருக்கிறேன் என கூறி தொலைபேசி எண்ணை கொடுத்தது சரியா?.
அன்புமணி பக்குவப்படவில்லை. கடமை, கண்ணியம், கட்டுப்பாடோடு உள்ள கட்சியில் அன்புமணி கலகத்தை ஏற்படுத்தி வளர்த்த கடாவே மார்பில் முட்டி உதைத்தது. அதனை கண்டு நான் இடிந்து போய்விட் டேன்.
எல்லோரும் தனது தாயை கடவுள் என்று தான் சொல்வார்கள். ஆனால் பொங்கல் சமயத்தில் தோட்டத்தில் நடைபெற்ற விழாவில் முகுந்தன் நியமனம் குறித்து அவரது தாய் பேசியதற்கு கண்ணாடி பாட்டிலை தூக்கி அவர் மீது வீசினார். நல்லவேளையாக அவர் மீது அது படவில்லை.
நிர்வாகக்குழு கூட்டத்தில் கட்சி நிர்வாகி பேசினால் தான் கட்சி வளர்ச்சிக்கு நாம் என்ன செய்யவேண்டுமென தெரிந்து கொள்ள முடியும். ஆனால் யாரையும் பேசவிடாமல் தடுத்தார். மேலும் கட்சியின் வளர்ச்சிக்காக எனக்கு மிகவும் பிடித்த மாவட்டங்களான தர்மபுரி, சேலத்திற்கு சென்றிருந்த போது அங்கு நான் அதிகம் பேரை வரவழைத்து பேசக்கூடாது.
200 பேருக்கு மேல் இருக்கக்கூடாது. தங்கியிருக்கும் அறையிலேயே கட்சி நிர்வாகிகளை சந்திக்க வேண்டுமென கட்சியின் நிறுவனருக்கே அன்புமணி கட்டளை போடுகிறார். ஒரு கட்சியின் நிறுவனருக்கே இந்த நிலை. இதையெல்லாம் பார்த்துதான் நிர்வாகக்குழுவில் அன்புமணிக்கு தலைமை பண்பு இல்லை என கூறினேன்.
6 ஆண்டுக்கு முன்பு கட்சியை நான் பார்த்துக்கொள்கிறேன் என அன்புமணி கூறினார்.தற்போது நடைபெறும் பிரச்சினை தொடர்பாக கட்சியினர் என்னிடம் சமாதானம் செய்தனர்.
அப்போது மக்களை அன்புமணி பார்க்கட்டும், தைலாபுரம் தோட்டத்தில் கட்சியை ராமதாஸ் பார்க்கட்டும் என தெரிவித்தார்கள். அதன்பிறகு வீட்டின் கேட்டினை சாத்தி வீட்டிலேயே இருக்கட்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். பொய்யை கூசாமல் அன்புமணி ராமதாஸ் பேசுவார், நான் கூட்டும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு செல்ல வேண்டாமென 108 மாவட்ட செயலாளர்களுக்கு அவரே கூறியிருந்தார்.
நான் கூட்டிய கூட்டத்திற்கு 8 பேர் மட்டுமே வந்தார்கள். அன்றே நான் இறந்துவிட்டேன். மறுநாள் பிழைத்து விட்டேன். அன்புமணியை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவேன் என்பது கற்பனை செய்து பார்க்க முடியாது. நான் அப்படி செய்வேனா?
பட்டாபிஷேகம்
என் மருமகள் என்னிடம் நீங்கள் தலைவரை (ஜி.கே. மணி) மாற்றி அன்புமணியை நியமிக்க வேண்டுமென சொன்னார். அதற்கும் சம்மதித்து அவருக்கு பட்டாபிஷேகம் செய்து ஆரத்தழுவி ஆனந்த கண்ணீர் விட்டேன். வற்புறுத்தலால் எனக்கு விருப்பமே இல்லாமல் அன்புமணிக்கு ஒன்றிய அமைச்சர் பதவி கொடுக்க சம்மதித்தேன். அப்போதும் சாதாரணதுறையை தான் கொடுத்தார்கள். இரவு தூங்காமல் கண் விழித்து பெரும் முயற்சி செய்து அவருக்கு சுகாதார துறை அமைச்சர் பதவியை பெற்று தந்தேன்.
இப்போது நடக்கும் பிரச்சினைக்கு ஒரே தீர்வு அய்யா, அப்பா, என்றில்லாமல் நிறுவனர் கூறியபடி பா.ம.க. செயல் தலைவர் பதவியை முழுமையாக ஏற்று செயல்பட வேண்டும். இல்லையென்றால் தொண்டராக இருந்து கட்சிக்கு பணியாற்றட்டும். இந்த பிரச்சினைக்கு இது தான் ஒரே தீர்வு. இதற்கு அவர் சம்மதித்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.
பா.ஜனதா கூட்டணிக்காக என் காலில் விழுந்தனர்
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது கூட்டணி குறித்து அன்புமணியிடம் பேசினேன். அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் பேச கூறியிருந்தேன். அப்போது பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அன்புமணி கூறினார்.
அதனால் அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி வைத்திருந்தால் சில இடங்களில் வெற்றி பெற்று கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கும். பா.ஜனதா வுடன் கூட்டணிவைக்க அன் புமணியும், சவுமியா அன்புமணியும் எனது இரண்டு கால்களையும் பிடித்துக்கொண்டு வற்புறுத்தினார்கள். இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் தனக்கு நீங்கள் தான் கொள்ளி வைக்க நேரிடும் என அன்புமணி கூறினார். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.
நானே கூட போட்டியிடுவேன்!
மாநில பொதுக்குழு கூடிதான் என்னை தேர்ந்தெடுத்தது. அதனால் நானே தலைவர் என அன்புமணி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு டாக்டர் ராம தாஸ், மாநில பொதுக்குழு எப்போது வேண்டுமானாலும் கூட்டலாம். அப்படியே செய்ய தயாராக இருக்கிறேன். 3 ஆண்டு முடிந்துவிட்டது. பொதுக்குழு கூட்டலாம்.
கூடிதான் என்னை தேர்ந்தெ டுத்தது. அதனால் நானே தலைவர் என அன்புமணி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு டாக்டர் ராமதாஸ், மாநில பொதுக்குழு எப்போது வேண்டுமானாலும் கூட்டலாம். அப்படியே செய்ய தயாராக இருக்கிறேன். 3 ஆண்டு முடிந்துவிட்டது. பொதுக்குழு கூட்டலாம். பொதுக்குழு கூட்டம் கட்சியின் நிறுவனர் வழிகாட்டுதலின் படி நடத்த வேண்டும் என விதி உள்ளது. பா.ம.க., பா.ஜனதா கூட்டணியில் இருக்கிறதா, இல்லையா என கூறுவதில் சில சங்கடங்கள் உள்ளன. மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் நாங்கள் சீட்டு கேட்க கூடாதா, நானே கூட போட்டியிடுவேன், மாநில இளைஞரணி தலைவராக தொடர்ந்து முகுந்தன் செயல்பட்டு கொண்டு உள்ளார்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.