பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற இலங்கை தமிழ் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

Viduthalai
1 Min Read

சென்னை, மே 30 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நேற்று (29.5.2025) தலைமைச் செயலகத்தில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுள் 9 மாணவ, மாணவியர்களின் மேற்படிப்பிற்கு உதவிடும் வகையில் தலா 50 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் இருந்து, 2024-2025 ஆம் கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பில் 937 மாணவர்களும், பதினொன்றாம் வகுப்பில் 827 மாணவர்களும் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் 722 மாண வர்களும் பொதுத்தேர்வு எழுதியுள்ளனர், இவர் களில் பலர் நல்ல மதிப் பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இம்மாண வர்களின் மேற்படிப்புக்கு உதவும் வகையில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முகாம் வாழ் இலங்கை தமிழர்களுள் 9 மாணவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான் றிதழ்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங் கினார்.

இந்நிகழ்வின் போது, துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்,  சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்  சா. மு. நாசர், தலைமைச் செயலாளர்  நா. முருகானந்தம்,  பொது மற்றும் மறுவாழ்வுத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறு வாழ்வுத்துறை ஆணையர் முனைவர் மா. வள்ளலார் ஆகியோர் உடனிருந்தனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *