ஆங்கிலத்தில் பின் தங்காதீர்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இரு மொழிக் கொள்கை ஒரு மொழிக் கொள்கை ஆகும் ஆபத்து 

ப.சிதம்பரம் எச்சரிக்கை

அரசியல்

காரைக்குடி ,ஜூன் 26 தமிழ்நாடு மாணவர்கள் ஆங்கிலத்தில் மிகவும் பின்தங்கிவிட்டால், இருமொழிக் கொள்கை, ஒருமொழி கொள்கை யாகிவிடும் என மேனாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். 

10ஆ-ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா காரைக்குடி அழ கப்பா பல்கலைக்கழகத்தில் நடை பெற்றது. பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற இந்த விழா வில் மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: 

தமிழ்நாடு அரசு இருமொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி. அப்படியானால் மாண வர்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றிருக்க வேண்டும். தமிழ் எந்த அளவுக்கு சரளமாக பேச, எழுத முடிகிறதோ, அதே அளவுக்கு ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும். ஓரளவு வேறு பாடு இருக்கலாம். ஆங்கிலத்தில் மிகவும் பின்தங்கிவிட்டால், இருமொழிக் கொள்கை, ஒருமொழி கொள்கையாகிவிடும். கணிதத்தின் முக்கியத்துவத்தால் தான் வள்ளுவர் எண்ணை முதலிலும், எழுத்தை 2-ஆவதாகவும் குறிப்பிட்டார். ஏனென்றால் கணிதம் இல்லாமல் எந்த துறையும் கிடையாது. நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளில் இருந்து வெளியே வரும் மாண வர்களால் ஆங்கிலத்தில் சரளமாக பேச, எழுத முடிவதில்லை என்பது குறை. அதை குற்றமாக சொல்ல வில்லை. 

மேலும் கணிதத்தை கண்டு பயப்படுகின்றனர். இனி கணிதம் இல்லாமல் எந்தத் துறையையும் படிக்க முடியாது. அனைத்து துறை களிலும் ‘டேட்டா’ முக்கியமாக உள்ளது. ‘டேட்டா’ என்பது கணி தம் தான். இதனால் மாணவர்களை கணிதம், ஆங்கிலத்தில் புலம் பெற்றவர்களாக மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *