டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தங்க நகைக் கடன் வழங்குவதற்கான நெறிமுறைகளில் கடுமையான கட்டுப் பாடுகளை விதித்து முன்மொழியப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்யக்கோரி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம்.
தி இந்து:
* டிசம்பர் 2024 இல் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி மீது பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒரே குற்றவாளியான ஞானசேகர் குற்றவாளி என சென்னை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு. தண்டனையின் அளவு ஜூன் 2 ஆம் தேதி அறிவிக்கப்படும்.
* தமிழில் இருந்து தான் கன்னடம் தோன்றியது என்ற கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது: நடிகர் கமல்ஹாசன் திட்டவட்டம். அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது என பேச்சு.
* ஹிண்டன்பர்க் வழக்கில் செபி அமைப்பின் மேனாள் தலைவர் மாதபி பூச் மீதான புகார்கள்: லோக்பால் ஒரு முழு பெஞ்ச் தீர்ப்பில் தள்ளுபடி செய்துள்ளது,
* அலிகார் வழக்கு: கைப்பற்றப்பட்ட இறைச்சி மாட்டிறைச்சி அல்ல: உ.பி. அலிகாரில் மே 24 அன்று நான்கு பேர் தாக்கப்பட்டு இறைச்சி ஏற்றப்பட்ட மினி லாரிக்கு தீ வைக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையில், கேள்விக்குரிய இறைச்சி மாட்டிறைச்சி அல்ல என தடயவியல் அறிவியல் ஆய்வக அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* வீட்டில் ரொக்கம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம்: நீதிபதி வர்மா மீது பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவர அரசு திட்டம். அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் ஆதரவு.
தி டெலிகிராப்:
* மே மற்றும் டிசம்பர் 2021க்கு இடையில் அசாமில் 80 போலி என்கவுண்டர்கள் மரணங்கள் குறித்து விசாரிக்க அசாம் மனித உரிமைகள் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* கர்னல் சோபியா குறித்த சர்ச்சை பேச்சு; மபி பாஜக அமைச்சருக்கு எதிராக எஸ்அய்டி இடைக்கால அறிக்கை: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்
– குடந்தை கருணா