கே.ஆர். சிறீராம் ராஜஸ்தானுக்கு இடமாறுதல் சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி எம்.எம்.சிறீவஸ்தவா

2 Min Read

கொலிஜியம் பரிந்துரை

சென்னை, மே 29 சென்னை தலைமை நீதிபதி கே.ஆர்.சிறீராம் அடுத்த 4 மாதங்களில் ஓய்வு பெறவி ருந்த நிலையில், அவரை ராஜஸ் தானுக்கு இடமாற்றம் செய்யவும், ராஜஸ்தான் தலைமை நீதிபதி எம்.எம்.சிறீவஸ்தவாவை சென்னைக்கு இடமாற்றம் செய்யவும் ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் 9 புதிய நீதிபதிகள் நியமனமும் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

கே.ஆர்.சிறீராம்

மும்பை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பதவி வகித்த கல்பாத்தி ராஜேந்திரன் சிறிராம் (கே.ஆர்.சிறீராம்), சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த 2024 செப்டம்பர் 27-ஆம் தேதி பொறுப்பேற்றார். இவர் 2025 செப்டம்பர் 27-ஆம் தேதியுடன் பணிஓய்வு பெற இருந்த நிலையில், இவரை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்யவும், அங்கு தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் எம்.எம்.சிறீவஸ்தவாவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கவும் ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்திருப்பது நீதித்துறை வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட அனுமதிக் கப்பட்ட மொத்த பணி இடங்கள் 75. இதில் தற்போது 60 நீதிபதிகள் பணியில் உள்ளனர். 15 இடங்கள் காலியாக உள்ளன. இதில் 9 வழக்குரைஞர்களை புதிய நீதிபதிகளாக நியமிக்கும் வகையில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.சிறீராம் தலைமையில், கடந்த மே 2-ஆம் தேதி ஓய்வுபெற்ற மூத்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், ஜூலை 24-ம் தேதியுடன் ஓய்வுபெற உள்ள நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய சென்னை உயர் நீதிமன்ற கொலீஜியம், 9 பேர் அடங்கிய பட்டியலை கடந்த ஏப்ரல் இறுதியில் உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கு பரிந்துரை செய்தது. இதில் 6 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்தும், 3 பேர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் 9 புதிய நீதிபதிகள் நியமனமும் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *