மாணவர்கள் பாதுகாப்பிற்கு ஆசிரியர்களே பொறுப்பு : அரசு
அரசு பள்ளிகள் திறக்கப்பட இருப்பதையொட்டி பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், பள்ளி வளாகத்தில் மாணவர்கள் பாதுகாப்பிற்கு தலைமை ஆசிரியர், ஆசிரியர்களே பொறுப்பு என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர் – ஆசிரியர் கழக உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளது.
உதவி ெபாறியாளர் பணி:
தமிழ்நாடு அரசில் 615 காலியிடங்கள்!
தமிழ்நாடு அரசில் உள்ள உதவி பொறியாளர், ஜூனியர் பிளானர் போன்ற பணிகளுக்கான 615 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. பொறியியல் டிகிரி முடித்து 21-30 வயது வரை இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு, ஆவண சரிபார்ப்பின் மூலம் தேர்ச்சி நடைபெறும். ரூ.37,700 – ரூ.1,38,500 வரை ஊதியம் வழங்கப்படும். இதற்கு வரும் ஜூன் 26 வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
தெரு நாய்களுக்கு கருத்தடை..
200 மருத்துவர்கள் அவசர நியமனம்
200 மருத்துவர்கள் அவசர நியமனம்
தமிழ்நாடு முழுவதும் உள்ள தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய 200 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் ஜூன் முதல் வாரத்தில் கருத்தடை செய்யும் பணிகள் தொடங்கும் எனவும், அத்துடன் அவற்றிற்கு வெறி நோய் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். தெரு நாய்கள் மனிதர்களை கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கரோனா எச்சரிக்கை!
கரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ள நிலையில், நேற்று சென்னையில் ஒருவர் மரணமடைந்ததால் மக்கள் பீதியடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட NB 1.8.1. கரோனா உள்ளூர் அளவில் பரவும். எனவே, பொது இடங்களுக்கு செல்லும்போது மாஸ்க் அணிந்து, அடிக்கடி கை, கால்களை சுத்தம் செய்யுங்கள். பொது இடங்களில் கூடுவதை தவிர்ப்பது நல்லது. தொற்று அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்திக் கொண்டு, மருத்துவரை அணுக வேண்டும்.
கற்றல் அடைவு தேர்வில்
குமரி முதலிடம்
குமரி முதலிடம்
தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5, 8-ஆம் வகுப்புகளுக்கு கற்றல் திறன் முன்னேற்றம் பற்றி அறிய தேர்வு நடந்தது. இத்தேர்வில் குமரி மாவட்டம் 66.55 சதவீதம் பெற்று முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. அதேநேரம் கோவை 48.24 சதவீதம் மட்டுமே பெற்று கடைசி இடத்தை பிடித்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.10, +2 பொதுத்தேர்வில் கடைசி இடங்களை பிடித்திருந்த வட மாவட்டங்கள் கூட கற்றல் அடைவு தேர்வில் முன்னேறியுள்ளன.