திருத்தணி, மே 29 திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு வசதியாக கோவில் நிர்வாகம் தங்கத்தேர் இழுப்பதற்கு, 3,500 ரூபாய் கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கிறது.
தேர் இழுக்கும் நிகழ்வில், அ.தி. மு.க., மேனாள் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், மாநில மகளிர் அணி செயலர் நடிகை காயத்ரி ரகுராம், உட்பட 10க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேனாள் முதலமைச்சர் பழனி சாமி படத்தை கையில் வைத்துக் கொண்டு, 2026ம் ஆண்டு சட்ட சபை தேர்தலில் வெற்றி பெற்று, முதலமைச்சர் ஆக வேண்டும் என, அ.தி.மு.க.,வினர் முழக்கம் எழுப்பினர்.
இந்த நிலையில் அங்கு நின்றுகொண்டு இருந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ‘கோவிலில் அரசியல் செய்யக்கூடாது; பழனிசாமி முதலமைச்சராக வேண்டும்’ என, முழக்கம் போடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்