கோயிலில் அரசியல் செய்ய வேண்டாம் பொது மக்கள் எதிர்ப்பு

1 Min Read

திருத்தணி, மே 29 திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு வசதியாக கோவில் நிர்வாகம் தங்கத்தேர் இழுப்பதற்கு, 3,500 ரூபாய் கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கிறது.

தேர் இழுக்கும் நிகழ்வில், அ.தி. மு.க., மேனாள் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், மாநில மகளிர் அணி செயலர் நடிகை காயத்ரி ரகுராம், உட்பட 10க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேனாள் முதலமைச்சர் பழனி சாமி படத்தை கையில் வைத்துக் கொண்டு, 2026ம் ஆண்டு சட்ட சபை தேர்தலில் வெற்றி பெற்று, முதலமைச்சர் ஆக வேண்டும் என, அ.தி.மு.க.,வினர் முழக்கம் எழுப்பினர்.

இந்த நிலையில் அங்கு நின்றுகொண்டு இருந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ‘கோவிலில் அரசியல் செய்யக்கூடாது; பழனிசாமி முதலமைச்சராக வேண்டும்’ என, முழக்கம் போடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *