சபாபதியைவிட, மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்
இந்திராணி அம்மையார்தான்! அவருக்குத் தமிழை எழுத, படிக்கக்
கற்றுத் தந்தவர், அவருடைய வாழ்விணையர் சபாபதி அவர்கள்தான்!
இயக்கம் ஒரு போராட்டம் என்று அறிவித்தால், தன்னந்தனியாகவே வந்து அப்போராட்டத்தில் பங்கேற்பார் – கைதாகியும் இருக்கிறார்!
சென்னை, மே 29 சுயமரியாதைச் சுடரொளி சபாபதி யைவிட, மிகவும் பாராட்டப்பட வேண்டியவர் இந்திராணி அம்மையார்தான். சென்னையிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும், இந்திராணி அம்மையார், பள்ளிக்கூட வாசலையேகூட மிதித்ததில்லை. அவருக்குத் தமிழை எழுத, படிக்கக் கற்றுத் தந்தவர், அவருடைய வாழ்விணையர் சபாபதி அவர்கள். அவரு டைய எளிமை, அவருடைய கடும் உழைப்பு, கொள்கை எல்லாம் சாதாரணமானதல்ல; சபாபதி அவர்கள் மறைந்த பிறகும், இயக்கம் ஒரு போராட்டம் என்று அறிவித்தால், யார் வந்தாலும், வராவிட்டாலும், தன்னந்தனியாகவே வந்து அப்போராட்டத்தில் பங்கேற்பார். கைதாகியும் இருக்கிறார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சுயமரியாதைச் சுடரொளி
பெரம்பூர் பி.சபாபதி நூற்றாண்டு விழா- தமிழர் தலைவர் பங்கேற்பு
பெரம்பூர் பி.சபாபதி நூற்றாண்டு விழா- தமிழர் தலைவர் பங்கேற்பு
26.5.2025 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கத்தில், புதுமை இலக்கியத் தென்றல் 1042 ஆவது சிறப்பு நிகழ்வாக நடைபெற்ற, சுயமரியாதைச் சுடரொளி பெரம்பூர் பி.சபாபதி நூற்றாண்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
தமிழ்நாட்டில் ஒரு சிறு கலவரம்கூட நடைபெறவில்லை!
காந்தியாரை சுட்டுக் கொன்ற கோட்சே யார் என்று தெரிந்தவுடன், பார்ப்பன சமூகத்திற்கு எதிராக வட மாநிலங்களில் கலவரங்கள் நடைபெற்றன. இந்த இயக்கத்தினால், தமிழ்நாட்டில் ஒரு சிறு கலவரம்கூட நடைபெறவில்லை. காரணம், பெரியார், சுயமரியாதை இயக்கம்தான்.
ஆகவே, பெரியாரால், எல்லோரும் பயன்பட்டு இருக்கிறார்கள்; படித்திருக்கிறார்கள்.
25 நூற்றாண்டு விழாக்கள்!
சுயமரியாதைச் சுடரொளி சபாபதி நூற்றாண்டை மட்டும் கொண்டாடுகிறார்கள் – நபருக்கு மட்டும் கொண்டாடுகிறார்கள். நூற்றாண்டு விழா என்பது இயக்கத்திற்கு இருக்கிறது; இவர்கள் அதை விட்டுவிட்டார்கள். சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா இருக்கிறது; சேரன்மாதேவி குருகுலப் போராட்டத்திற்கு நூற்றாண்டு விழா இருக்கிறது; வைக்கம் போராட்டத்திற்கு நூற்றாண்டு விழா இருக்கிறது; ‘குடிஅரசு’ இதழுக்கு நூற்றாண்டு விழா இருக்கிறது. இவற்றையெல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்தால், இந்த ஆண்டு 25 பேருக்குமேல் நூற்றாண்டு விழாக்கள் – வெள்ளி விழா நூற்றாண்டுகளைக் கொண்டாடி இருக்கின்றோம். ஓராண்டில் இவற்றைக் கொண்டாடி இருக்கின்றோம். இதுதான் இந்த இயக்கத்தி னுடைய சிறப்பாகும்.
எதிர்நீச்சல் அடித்து, கசப்பான கொள்கைகளைப் பிரச்சாரம் செய்தபோது, யாரும் வாழ்த்தியது இல்லை. ‘‘நீ உருப்படுவியாடா?’’ என்று கேட்பார்கள்.
என்னுடைய அத்தை ஒருவர், காசிக்கெல்லாம் சென்று வந்தவர்கள். கடைசி வரையில் தனியாகவே வாழ்ந்தவர். என் அப்பாவின் மூத்த தங்கை கமலாம்பாள்.
அத்தையாயிற்றே என்று நாங்கள் அவரிடம், அன்போடு செல்வோம். ஆனால், ஆச்சார அனுஸ்டா னங்களைக் கடைப்பிடித்த ஒற்றைப் பார்ப்பனத்தி போல அவருடைய நடவடிக்கைகள் இருக்கும்.
‘‘நீ, இராமசாமி நாயக்கனுடைய ஆள்தானே – நீங்கள் எல்லாம் உருப்படமாட்டீங்கடா!’’
அந்தக் காலத்திலேயே காசிக்குத் தனியாகச் சென்று, உயிரோடு திரும்பி வந்தார்கள்.
அவர் தனி வீட்டிலேயே வசித்தார். நாள்தோறும் பூஜை செய்வார். ‘‘டேய், நீ எல்லோருடனும் பழகுபவன்; கால், கைகளைக் கழுவிக் கொண்டு வா’’ என்பார்.
‘‘நீங்கள் எல்லாம் சிசு பாலன் கூட்டமடா. நீ, இராம சாமி நாயக்கனுடைய ஆள்தானே – நீங்கள் எல்லாம் உருப்படமாட்டீங்கடா, நீங்கள் எல்லாம் நல்ல கதிக்குப் போவீர்களா?’’ என்பார்.
நாங்கள் நல்ல கதியில்தான் இருக்கிறோம்; அவரையும் சேர்த்து நாங்கள்தான் பாதுகாத்தோம்.
இந்தக் கொள்கையினுடைய வீச்சு- இந்தக் கொள்கையினுடைய தாக்கம் – மனிதநேயம்.
‘நம்மைத் தாழ்த்தியவர்களையும்,
நாம் தாழ்த்தியதில்லை’’ -இதுதான் சுயமரியாதை இயக்கத்தினுடைய தத்துவம்!
நாம் தாழ்த்தியதில்லை’’ -இதுதான் சுயமரியாதை இயக்கத்தினுடைய தத்துவம்!
யாரையும் வெறுப்பதில்லை. எல்லோரையும் அரவணைப்பது. இன்னுங்கேட்டால், ‘‘நம்மைத் தாழ்த்தியவர்களையும், நாம் தாழ்த்தியதில்லை’’ இதுதான் சுயமரியாதை இயக்கத்தினுடைய தத்துவமாகும்.
சுயமரியாதை இயக்கத்தினால், ஒவ்வொரு குடும்பமும் பயன்பட்டு இருக்கிறது.
கலைஞர் அவர்கள் முதலமைச்சரானவுடன், தரும புரியில், அய்யா சிலையை முதன்முறையாகத் திறந்து வைத்தார். அப்போது உரையாற்றும்போது,
‘‘நான் உருப்பட்டேனா? இல்லையா? என்பதை ஊரறியும், உலகறியும்’’- கலைஞர்
‘‘அண்ணா அவர்கள் திறந்து வைக்கவேண்டிய சிலையை, அவருக்குப் பதில் நான் திறக்கிறேன். நான், மாணவப் பருவத்திலேயே பெரியாரைப் பின்பற்றி வந்தேன், திருவாரூரில். என்னைப் பார்த்து, என் குடும்பத்தினரும், என் சொந்தக்கா ரர்களும் ‘‘நீ உருப்படுவியா?’’ என்று கேட்டார்கள்.
நான் உருப்பட்டேனா? இல்லையா? என்பதை ஊரறியும், உலகறியும்’’ என்றார்.
‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு என்ன பெருமை?
கொள்கைதான்.
அந்தக் கொள்கை பிறந்த இடம் எது?
சுயமரியாதை இயக்கம் என்கிற தாய்க்கழகத்தில்தான்.
அதுதான் கரு.
அந்தக் கருவிலிருந்து வெளியே வந்தவர்கள்.
கருவில் உருவான திரு.
சபாபதி அவர்களுக்கு இன்றைக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுகிறோம் என்றால், ஏன் கொண்டாடுகிறோம்?
சபாபதி வாழ்வு மற்றவர்களுக்குப் பாடமாக இருக்கவேண்டும்
இந்தக் குடும்பத்தோடு நிற்காமல், அவரு டைய வாழ்வு மற்றவர்களுக்குப் பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நூற்றாண்டு விழா கொண்டாடுகிறோம்.
இங்கே அவரை வெறும் படமாகப் பார்க்கக் கூடாது; பாடமாகப் பார்க்கவேண்டும்.
எத்தனையோ பேர் அமைதியாக, அடக்கமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.
இந்தக் கொள்கை வழியில் நடப்பதால், தவறு செய்வதற்கே இடமில்லையே!
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பூண்டி வாண்டையார் அவர்கள் ஆர்.எஸ்.எஸ். உணர்வாளர். என்னிடம் மிகவும் அன்பாக இருப்பார். மரியாதையோடு பழகுபவர். நம் கொள்கைமீது அவருக்கு மிகுந்த மரியாதை உண்டு.
இளைஞர்களுக்கு ஒழுங்கு, கட்டுப்பாட்டை சொல்லிக் கொடுப்பது திராவிடர் கழகம்தான்!
ஒருமுறை அவர் என்னிடம் சொன்னார், ‘‘தஞ்சை மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு ஒழுங்கு, கட்டுப்பாடு மிகுந்த முறையைச் சொல்லிக் கொடுத்தது உங்களுடைய இயக்கம்தான்; இல்லையென்றால், அவர்கள் தவறான வழிக்குச் சென்றிருப்பார்கள்’’ என்று சொன்னார்.
சபாபதி அவர்களுடைய குடும்பத்தைப்பற்றி எல்லோருக்கும் தெரியவேண்டும்.
ஒவ்வொரு குடும்பத்தின் வரலாற்றையும் பதிவு செய்யவேண்டும்!
இந்த நிகழ்ச்சியை, ஒரு புத்தகமாகக் கொண்டு வரவேண்டும். அது அவர்களுக்காக மட்டுமல்ல, எல்லோருக்கும் தெரியவேண்டும் என்பதற்காகத்தான்.
அந்தப் புத்தகத்தைப் பார்க்கும்போது, அவருடைய கொள்ளுப் பேரப் பிள்ளைகளுக்கு ஒரு பெரிய உணர்வு வரும். ஒவ்வொரு குடும்பத்தின் வரலாற்றையும் பதிவு செய்யவேண்டும். அதற்காகத்தான், இதுபோன்ற நூற்றாண்டு விழாக்கள்.
இதுபோன்ற விழாக்கள் கேளிக்கைக்காகவோ, வேடிக்கைக்காகவோ அல்ல!
சுயமரியாதைச் சுடரொளி சபாபதியின் வாழ்க்கை வரலாறு!
‘‘பெரியார் பெருந்தொண்டர் மானமிகு சபாபதி அவர்கள், மே மாதம், 17 ஆம் நாள், 1925 ஆம் ஆண்டு, நேதாஜி நகர், சின்னக்காஞ்சிபுரத்தில், பெருமாள் – தாயாரம்மாள் இணையருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் இரண்டு தம்பிகள், மூன்று தங்கைகள்.
ஒரு தம்பி, லேப் டெக்னிஷியனாகவும், ஒரு தங்கை செவிலியராகவும் பயிற்சி பெற்று இறுதிவரையில் பணியாற்றினர். மற்ற அனைவரும், மானமிகு சபாபதி உள்பட பள்ளி இறுதி வகுப்பு எஸ்.எஸ்.எல்.சி. வரையே படித்தவர்கள்.’’
நான் உரையாற்றுகின்ற கூட்டத்தில் கேட்பேன், ‘‘உங்கள் பாட்டி யாராவது படித்து பட்டம் பெற்றிருக்கி றார்களா?’’ என்று. ஒரு ஆள்கூட கை தூக்கியதில்லை.
200 பேர் உள்ள அந்த அரங்கில்,
ஒரே ஒரு ஆள் கை தூக்கினார்!
ஒரே ஒரு ஆள் கை தூக்கினார்!
கல்லூரி நிகழ்வொன்றில் நான் உரையாற்றும்போது, அதே கேள்வியைக் கேட்டேன். 200 பேர் உள்ள அந்த அரங்கில், ஒரே ஒரு ஆள் கை தூக்கினார்; அவர் சொல்லும்போது, என்னுடைய பாட்டி பட்டதாரி, என்னு டைய அப்பா பட்டதாரி, நானும் பட்டதாரி என்றார்.
இதெல்லாம் யாரால்?
பெரியாரால்!
தமிழ்நாட்டின் ஆட்சிமொழிக் காவலர் கீ.இராமலிங்கனார்
‘‘மானமிகு சபாபதி அவர்கள், எஸ்.எஸ்.எல்.சி. முடித்து வருவாய்த் துறையில் (ரெவின்யூ டிபார்ட்மெண்ட்) தற்காலிகமாக பணியாற்றும்போது, மதிப்பிற்குரிய கீ.இராமலிங்கனார், எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, தமிழ்நாட்டின் ஆட்சிமொழிக் காவலராக பணியாற்றியவர். அவரின் தொடர்பு சபாபதிக்குக் கிடைத்தது.
வருவாய்த் துறையில், சபாபதி அவர்களின் நேர்மையைக் கண்டு, அந்தத் தொடர்பு நெருங்கிய நட்பாக மாறியது.
அப்பணியைத் தொடர்ந்து, சென்னையில் (அப்போ தைய மெட்ராஸ்) தபால் தந்தி துறையில், தற்காலிகமாக தபால்காரராக சிறிது காலம் பணியாற்றினார்.’’
எவ்வளவு பெரிய சமுதாய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது!
தபால் துறையில் ஒரு பெரிய பிரச்சினை என்னவென்றால், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த வர்கள், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால், உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் கிட்டே வர மாட்டார்கள்; கிட்டேயும் வரக்கூடாது என்பார்கள். நகரங்களில் அல்ல, கிராமங்களில். நம்முடைய ஆ.இராசா அவர்கள், தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக ஆனபோது, அவரிடம் நான் சொன்னேன், ‘‘எவ்வளவு பெரிய சமுதாய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இன்றைக்கு அந்தத் துறைக்கே அமைச்சராக வந்திருக்கிறீர்கள்’’ என்றேன்.
அய்யா சபாபதியின் வாழ்விணையர் இந்திராணி அம்மையார்!
‘‘ஜூன் மாதம், 3 ஆம் நாள், 1944 ஆம் ஆண்டு – பழுத்த ஆத்திகக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இந்திராணி அம்மையாரை வாழ்விணையராக ஏற்றார்.’’
இதில் முக்கியமாகச் சொல்லவேண்டியது என்னவென்றால், சபாபதி அவர்களுடைய பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் எல்லாம் நன்றாகப் படித்து நல்ல நிலையில் இருக்கின்றார்கள். அது மகிழ்ச்சிக்குரியது. இதற்கெல்லாம் அடித்தளம் யார் தெரியுமா? சபாபதி அவர்களைவிட, மிகவும் பாராட்டப்பட வேண்டியவர் இந்திராணி அம்மையார்தான்.
அவருடைய எளிமை, அவருடைய கடும் உழைப்பு, கொள்கை எல்லாம் சாதாரணமானதல்ல.
இவ்வளவு பெருமையாக அவரை சொல்வ தற்குக் காரணம் என்னவென்றால், சபாபதி அவர்கள் மறைந்த பிறகும்கூட, பிள்ளைகள் பல ஊர்களில், நல்ல நிலையில் இருந்தார்கள். இயக்கம் ஒரு போராட்டம் என்று அறிவித்தால், யார் வந்தாலும், வராவிட்டாலும், தன்னந்தனியாகவே வந்து அப்போராட்டத்தில் பங்கேற்பார். கைதாகியும் இருக்கிறார்.
பல பேருடைய வரலாறு தெரியாமல் போயிற்று!
இந்தத் தகவல்கள் எல்லாம் எல்லோருக்கும் தெரியவேண்டும். ஓகோ, இப்படிப்பட்டவர்கள் எல்லாம் நம்முடைய இயக்கத்தில் இருந்தார்களா, இருக்கி றார்களா? என்று.
அடக்கம், அடக்கம் என்று சொல்லி, பல பேருடைய வரலாறு தெரியாமல் போயிற்று.
இந்த இயக்கத்தினால் எவ்வளவு பெரிய லாபம்?
பெரியரால் எவ்வளவு பெரிய லாபம்?
பெரியார் கொள்கையினால் எவ்வளவு பெரிய லாபம்? என்று எல்லோருக்கும் தெளிவாகத் தெரியவேண்டும்.
‘‘சென்னையிலேயே பிறந்து வளர்ந்திருந்தும், இந்திராணி அம்மையார், பள்ளிக்கூட வாசலையேகூட மிதித்ததில்லை. அவருக்குத் தமிழை எழுத, படிக்கக் கற்றுத் தந்தவர், அவருடைய வாழ்விணையர் சபாபதி அவர்கள்.’’
சாவித்திரி பாய் புலே வரலாறைப் படித்தீர்கள் என்றால், அதில் அந்த அம்மையாரை பள்ளிக்கூடம் தொடங்கச் சொன்னார், ஜோதிபாபுலே. அதற்காக, அந்த அம்மையாருக்கு அவரே பாடம் சொல்லிக் கொடுத்தார். பிறகு பள்ளிக்கூடம் தொடங்கச் செய்தார்.
திராவிடர் கழகக் கூட்டங்கள் எங்கு நடந்தாலும், தேடித் தேடிக் கேட்கத் தொடங்கினார்!
‘‘ஒரு நாள் வேலை முடிந்து திரும்பும்போது (சபாபதி அவர்கள்), திராவிடர் கழகக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் எழுச்சிமிகு உரையைக் கேட்டார்.’’
அங்கே தான் பிடித்தது கரண்ட். எப்போதுமே, மருந்தை உள்ளே போட்டால் போதும். அதனால்தான் அய்யா அவர்கள் சொல்வார், ‘‘நீ ஏற்கவேண்டாம்; முதலில் கேள்’’ என்பார். கேட்டாலே, நம்முடைய வழிக்கு வருவார்கள் பெரும்பாலும்.
‘‘இது நியாயம்தானே அவர் சொல்வது’’ என்கிற உணர்வு தானாக வரும்.
ஏனென்றால், நாம் உண்மையைத் தவிர வேறு எதுவும் பேசுவதில்லை. நியாயத்தைத் தவிர வேறு எதுவும் பேசுவதில்லை.
‘‘பின் சென்னையில், திராவிடர் கழகக் கூட்டங்கள் எங்கு நடந்தாலும், தேடித் தேடிக் கேட்கத் தொடங்கினார். தந்தை பெரியார் அவர்களின் எளிய உரைகளே, சபாபதி அவர்களை, நாத்திகராக மாற்றின.’’
(தொடரும்)