மது பிரியர்களுக்கு எச்சரிக்கை!

viduthalai
1 Min Read

பொதுவாக இன்று பலரும் மதுவுக்கு அடிமையாகி இருக்கின்றனர் .பலர் இதனால் பாதிக்கப்பட்டு அதை விட முடியாமல் அவதிப்படுகின்றனர்

நீங்கள் மதுவுக்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாமல் இருந்தால் ,இந்த குறிப்புகளை படித்துப் பாருங்கள்

  1. ஆல்கஹால் சருமத்தில் சுருக்கத்தை கொண்டு வரும்.
  2. ஆல்கஹால் உடலில் நீரிழப்பு மற்றும் சோம்பலை ஏற்படுத்தி நம்மை சோம்பேறியாக்கும் .
  3. ஒருவர் ஆல்கஹாலுக்கு அடிமையானால் அது அவரின் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டை சேதப்படுத்தும்.
  4. ஒருவர் அதிகமாக மது அருந்துவதால் அவரின் மூளை செல்கள் சுருங்கிவிடும்.
  5. அதிகமாக மது அருந்துவதால் , சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்க இயலாமை, வேலையில் ஒழுங்கற்ற தன்மை, போன்றவை உண்டாகும்
  6. மேலும் மதுவுக்கு அடிமையானால் கவனம் செலுத்த இயலாமை, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமை மற்றும் கோபம் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.
  7. மதுவிற்கு அடிமையானால் அது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது.
  8. ஆல்கஹால் முதலில் உங்களை போதையில் ஆழ்த்தினாலும், அதன் விளைவுகள் குறைந்த தூக்கத்தில் இருந்து எழுந்திருக்க செய்கிறது .

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *