டெக்கான் கிரானிக்கல், சென்னை:
*இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘அமெரிக்காவில் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வகுப்புகளை தவிர்த்தல், பாதியிலேயே படிப்பை கைவிடு தல், படிக்கும் பாடத்திட்டத்தில் இருந்து வெளியேறுதல், போன்ற செயல்களில் ஈடு பட்டால் அவர்களின் மாணவர் விசா ரத்து செய்யப்படும், என கூறப்பட்டுள்ளது.
தி இந்து:
* ஓபிசி, எஸ்.சி. எஸ்.டி. பிரிவினரில் தகுதியானவர் கண்டறியப்படவில்லை என்பது மனுவாதத்தின் புதிய வடிவம். இடஒதுக்கீட்டிற்கு எதிரான பாஜக – ஆர்எஸ்எஸ்சை எதிர்த்து போராடுவோம் என ராகுல் ஆவேசம்.
* பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட கோரி இந்தியா கூட்டணி கட்சிகள் கோரிக்கை விடுக்க முடிவு.
* மராத்தாக்களை ஓபிசி பிரிவில் சேர்த்து இட ஒதுக்கீடு சலுகைகளைப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்து போராடுவேன் என்று மகாராட்டிரா அமைச்சரும் இதர பிற்படுத்தப்பட்டோர் மூத்த தலைவருமான சகன் புஜ்பால் பேட்டி.
* நாடு முழுவதும் 22 உயர்நீதிமன்றநீதிபதிகள் இடமாற்றம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி: உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை.
* ஹிந்துத்துவாவை முன்னிலைப்படுத்திய சவர்க்காரின்பெயரை 1950 ஆம் ஆண்டு சின்னங்கள் மற்றும் பெயர்கள் (முறையற்ற பயன்பாட்டை தடுக்கும்)சட்டத்தின் கீழ் பாதுகாக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப் பாக்கும் இலக்கை இந்தியா அடையத் தவறி விட்டது: முன்னாள் மத்திய வேளாண் செயலாளர் சிராஜ் உசேன் வெளியிட்ட ஆய்வறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* உ.பி. மாநிலத்தில் இறைச்சி கொண்டு சென்றதற்காக நான்கு இளைஞர்கள் மீது தாக்குதல்; பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டம் மற்றும் நீதித்துறை தீர்வு காண வலியுறுத்தி முஸ்லிம் பிரமுகர்கள் உ.பி. முதலமைச்சருக்கு கடிதம்.
தி டெலிகிராப்:
* ராமன் ஒரு புராண கற்பனைப் பாத்திரம் என கடந்த மாதம் அமெரிக்காவில் நடந்த ஒரு கலந்துரையாடல் அமர்வின் போது ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிரான குற்றவியல் புகாரை வாரணாசி நீதிமன்றம் நிராகரிப்பு.
.- குடந்தை கருணா